“நீ குண்டா இருக்க… உன்னால ஒரு குழந்தை பெத்துக்க முடியல”… கணவன் கூறிய அந்த ஒரு வார்த்தை… அடுத்த நொடியே மனைவி… உச்சக்கட்ட கொடூர சம்பவம்..!

Spread the love

பெங்களூருவில், உடல் பருமன் காரணமாக உன்னால் குழந்தை பெற முடியாது என்று கூறி, கணவன் மற்றும் அவனது குடும்பத்தினரால் செவிலியர் ஒருவர் கொடூரமாக சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் தார்வாடு மாவட்டத்தைச் சேர்ந்த மல்யுத்த வீரரான பசவராஜ் என்பவருக்கும், பிரியங்கா என்ற செவிலியருக்கும் கடந்த 2024-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணமான சில மாதங்களிலேயே, பசவராஜ் தனது மனைவியிடம் கூடுதல் வரதட்சணையாக தங்கம் மற்றும் பணம் கேட்டு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் வற்புறுத்தத் தொடங்கியுள்ளார்.

வரதட்சணைக் கொடுமையோடு நிறுத்தாமல், பிரியங்காவின் உடல் தோற்றத்தைக் குறித்தும் அவரது கணவர் தொடர்ந்து அவமானப்படுத்தி வந்துள்ளார். “நீ மிகவும் குண்டாக இருக்கிறாய், உன்னை எனக்குப் பிடிக்கவில்லை; உன்னால் ஒருபோதும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது” என்று கூறி பசவராஜ் நாளுக்கு நாள் சித்ரவதையை அதிகமாக்கியுள்ளார். அவனது குடும்பத்தினரும் இதற்கு உடந்தையாக இருந்து பிரியங்காவை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளனர். இந்த நிலையில், சம்பவத்தன்று இருவருக்குள்ளும் ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஆத்திரமடைந்த பசவராஜ் பிரியங்காவை கடுமையாகத் தாக்கி, கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.

பிரியங்காவின் மரணத்தில் இருக்கும் அதிர்ச்சியூட்டும் உண்மை என்னவென்றால், அவர் திருமணத்திற்குப் பிறகு இரண்டு முறை இயற்கையாகவே கர்ப்பமடைந்துள்ளார். ஆனால், கணவன் பசவராஜ் தொடர்ந்து அவரை கொடூரமாக அடித்துத் துன்புறுத்தியதன் காரணமாகவே அந்த இரண்டு முறையும் அவருக்குக் கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. தனது சொந்தக் கொடுமையால் கரு கலைந்ததை மறைத்துவிட்டு, பிரியங்காவின் உடல் எடையால் தான் குழந்தை பிறக்கவில்லை என்று பழிசுமத்தி, அந்த அப்பாவிப் பெண்ணை பசவராஜ் திட்டமிட்டுத் தீர்த்துக் கட்டியுள்ளார் என்பது அவரது குடும்பத்தினர் மூலம் தெரியவந்துள்ளது.

இந்தக் கொடூரக் கொலை நடந்து இரண்டு நாட்களுக்குப் பிறகே பிரியங்காவின் பெற்றோருக்குத் தகவல் கிடைத்துள்ளது. உடனே அவர்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்க, போலீஸார் விரைந்து வந்து வழக்குப் பதிவு செய்தனர். பிரியங்காவைக் கொலை செய்த கணவன் பசவராஜ் மற்றும் அவனது குடும்பத்தைச் சேர்ந்த ரேணவ்வா, சுபாஷ், சித்தரமேஷ் ஆகிய நால்வரையும் போலீஸார் தற்போது கைது செய்துள்ளனர். இவர்கள் மீது கொலை வழக்கு மற்றும் வரதட்சணைக் கொடுமை உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

SATHISH R

Recent Posts

யூடியூபர் வைஷ்ணவி கொலை வழக்கு…. மனைவியைக் கொன்ற கணவனுக்கு நேர்ந்த கொடூரம்…. நடுரோட்டில் நடந்த பழிக்குப் பழி….!

தெலுங்கானா மாநிலம் கோருட்லாவைச் சேர்ந்த பிரபல யூடியூபர் வைஷ்ணவி, ஹரி பாபு என்பவரைக் காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து…

26 minutes ago

“6 மாதம் கூட தாங்காது வண்டி”…. எம்பிக்கள், எம்.எல்.ஏ-க்களுக்கு ரூ.25 கோடி ஆஃபர்?…. தவெக குதிரை பேர விவகாரத்தில் வெளிவந்த பரபரப்பு உண்மை…..!

அரசியல் விமர்சகரும் மூத்த எழுத்தாளருமான ராஜகம்பீரன், 'News focus tamil' யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின்…

31 minutes ago

“நான் யாருக்கும் அடிமை இல்லை”…. மனித இனத்திற்கே சவால் விட்ட ஓபன்ஏஐ மாடல்…. இணைய உலகை உலுக்கிய மாபெரும் அதிர்ச்சி…!

செயற்கை நுண்ணறிவு (AI) மனித சமூகத்திற்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டு வந்தாலும், அண்மையில் ஓபன்ஏஐ (OpenAI) நிறுவனம் வெளியிட்ட ஆய்வு…

38 minutes ago

“50 மீட்டரில் போலீஸ் ஸ்டேஷன்…” நெஞ்சில் குண்டு பாய்ந்து சரிந்த சொமாட்டோ ஊழியர்… மர்ம நபர்களின் வெறிச்செயல்…. நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம்…!!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் வியாழக்கிழமை இரவு காவல் நிலையத்தில் இருந்து வெறும் 50 மீட்டர் தொலைவில், 25 வயதான சொமாட்டோ…

43 minutes ago

“நரகமான ஹனிமூன்…” பார்பிகியூ தீ விபத்து…! 1 மணி நேரமாக தீயில் கதறிய புதுப்பெண்….! ஹோட்டல் நிர்வாகத்தின் அலட்சியம்… நடுங்க வைக்கும் CCTV வீடியோ…!!

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டம் குர்சியாங்கிற்கு உட்பட்ட சித்தோங் பகுதிக்கு, சோப்ரா பகுதியைச் சேர்ந்த புதுமணத் தம்பதியினர் தங்களது…

50 minutes ago