இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, பெண் வேடமிட்டு ஏமாற்றித் திருமணம் செய்துகொண்ட நபரைக் கொலை செய்த வாலிபர் குஜராத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத்தைச் சேர்ந்த பியூஷ் (20) என்ற வாலிபருக்கு, சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலம் பூனம் என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்துள்ளது. நாளடைவில் இருவருக்குள்ளும் காதல் மலரவே, இருவரும் சேர்ந்து கணவன் மனைவியாக வாழத் தொடங்கினர். ஆனால், திருமணத்திற்குப் பிறகு விரதம் இருப்பதைக் காரணம்காட்டி, அந்தப் பெண் பியூஷுடன் உடல் ரீதியான நெருக்கத்தைத் தொடர்ந்து தவிர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், தனது மனைவி வீட்டில் ரகசியமாக முகச்சவரம் (ஷேவிங்) செய்வதைப் பார்த்த பியூஷ் பேரதிர்ச்சி அடைந்தார். தீவிரமாக விசாரித்தபோது, பூனம் என்ற பெயரில் பெண்ணாக நடித்தவர் உண்மையில் பீகாரைச் சேர்ந்த சந்தன் என்ற ஆண் என்பதும், ஓரினச்சேர்க்கை உறவை விரும்பி அவர் பெண் வேடமிட்டதும் அம்பலமானது. இதனால் அவர்களுக்குள் கடுமையான தகராறு ஏற்பட்டு, பியூஷ் அவரைப் பிரிந்து சென்றார். இருப்பினும், சந்தன் விடாமல் உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் என பியூஷைத் துரத்திச் சென்று, இறுதியாக குஜராத்தின் ராஜ்கோட் நகரில் அவர் வேலை செய்யும் இடத்திற்கே சென்று தகராறு செய்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பியூஷ், பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறி சந்தனை ஆள் நடமாட்டமில்லாத ரயில் தண்டவாளம் அருகே அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஏற்பட்ட வாக்குவாதத்தில், பெரிய கல்லை எடுத்து சந்தனைத் தாக்கிக் கொலை செய்துவிட்டு உடலை மறைத்துவிட்டு தப்பியோடினார். இரண்டு நாள்களுக்குப் பிறகு பெண்கள் ஆடையுடன் அழுகிய நிலையில் மீட்ட சந்தனின் உடலைக் கைப்பற்றிய போலீஸார், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பியூஷைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதிக்கு உட்பட்ட ஆர்.கே.பேட்டை அருகே, குடும்பத் தகராறு காரணமாக மனைவியை குடும்பம் நடத்த அழைத்தபோது ஏற்பட்ட…
வடமேற்கு டெல்லியின் ஸ்வரூப் நகர் பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் நான்கு பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு,…
பூமியிலிருந்து பார்க்கும்போது அமைதியாகக் காட்சியளிக்கும் நிலவில், கடந்த 2024-ஆம் ஆண்டு ஒரு மிகப்பெரிய விண்வெளி மோதல் நிகழ்ந்துள்ளது. 2024 ஏப்ரல்…
தமிழ்நாடு பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் மீது, அக்கட்சியின் பெண் நிர்வாகி ஒருவர் பாலியல் துன்புறுத்தல், ஏமாற்றுதல் மற்றும்…
மதுரையைச் சேர்ந்த தமிழக அமைச்சர்களான CTR நிர்மல் குமார், விஸ்வநாதன் இடையே உள்கட்சி பூசல் மற்றும் பனிப்போர் நிலவி வருவதாக…
\ தமிழ்நாட்டு அரசியலில் தற்போதைய கூட்டணி மாற்றங்களும், தலைவர்களின் பரஸ்பர விமர்சனங்களும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. இது குறித்து பிரபல…