“தயவுசெய்து என்னை விட்ரு”… லாட்ஜில் அடிக்கடி உல்லாசத்திற்கு அழைத்த இளைஞர்… இறுதியில் செல்போனைத் திறந்த தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி…!

Spread the love

சென்னை புது வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த பிகாம் படித்து வரும் இளம் பெண் ஒருவர் மோஜ் செயலி மூலமாக நண்பர்களோடு பழகி வந்துள்ளார். அதன்படி லிபின் ராஜ் (25) என்ற வாலிபருடன் இளம்பெண்ணுக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் நட்பாக பழகிய வாலிபர் நாளடைவில் இளம்பெண்ணுக்கு காதல் வலை விரித்துள்ளார். அதில் இளம்பெண் மயங்கிய நிலையில் அவரோடு வீடியோ காலில் பேசி வந்தார். இதுபோன்ற வீடியோ காலில் பேசும்போது லிபின் ராஜ் இளம் பெண்ணை ஆபாசமாக புகைப்படங்கள் எடுத்துள்ளார்.

இதனிடையே கடந்த செப்டம்பர் மாதம் இளம்பெண்ணிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய அவர், உன்னை ஆபாசமாக புகைப்படங்கள் எடுத்து வைத்துள்ளேன். நான் சொல்வது போல கேட்காவிட்டால் அந்த புகைப்படங்களை எல்லாம் வெளியிட்டு விடுவேன் என்று கூறி மிரட்டி உள்ளார். இதற்கு பயந்து போன அந்த இளம் பெண் தயவு செய்து என் புகைப்படங்களை வெளியிட்டு விடாதே நீ சொல்வது போல நான் தொடர்ந்து நடந்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட வாலிபர் நான் சொல்வது போல பெரிய மேடு லாட்ஜுக்கு வந்துவிடு, அங்கு இருவரும் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறியுள்ளார். அவர் மிரட்டியபடி அழைத்ததால் பயந்து போன இளம் பெண் அவர் கூறியது போல பெரிய மேட்டில் உள்ள லாட்ஜுக்கு சென்றார்.

அங்கு லிபின் ராஜ் இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். கடந்த மாதமும் இதேபோல மிரட்டி அந்த லாட்ஜுக்கு வரவழைத்து இளம்பெண்ணை நாசம் செய்துள்ளார். மூன்றாவது முறையாக ஆபாசமாக எடுக்கப்பட்ட இளம் பெண்ணின் புகைப்படங்களை இன்ஸ்ட்டாவில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டல் விடுத்து இரண்டு முறையும் பெரிய மேடு லாட்ஜில் வைத்து லிவிங் ராஜ் அடிக்கடி உல்லாசமாக இருந்த நிலையில் மூன்றாவது முறையும் துணிச்சலாக இளம் பெண்ணை லாட்ஜுக்கு வரவழைத்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இளம்பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய அவர், நான் சொல்வது போல இந்த முறையும் வந்துவிட இல்லை என்றால் நடப்பதே வேறு, உன் புகைப்படங்களை நீ வராவிட்டால் உனது உறவினர்களுக்கு அனுப்பி விடுவேன் என்று கூறி மிரட்டி உள்ளார். அப்போது இளம் பெண் தனது பாட்டு இறந்து மூன்று நாட்கள் தான் ஆகிறது என்று கூறி லாட்ஜுக்கு வர முடியாது என கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் இளம் பெண்ணின் ஆபாச புகைப்படங்களை அவருடைய தாயாரின் செல்போனுக்கு அனுப்பியுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த இளம் பெண்ணின் தாயார் இது பற்றி போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து கன்னியாகுமரியை சேர்ந்த அந்த வாலிபரை கைது செய்தனர். ஆட்டோ டிரைவர் ஆன இவர் இதுபோன்று வேறு எந்த பெண்களிடம் ஆவது அத்துமீறி நடந்துள்ளாரா என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Nanthini

Recent Posts

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

11 minutes ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

16 minutes ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

25 minutes ago

‘ஒரு நிமிஷம் லேட்டானாலும் விடமாட்டோம்’ ஊழியர்களின் ரத்தத்தை உறிஞ்சும் கார்ப்பரேட் நிறுவனம்… நெட்டிசன்களை அதிரவைத்த ஆபீஸ் ரூல்ஸ்..!!

சமூக வலைத்தளமான X தளத்தில் அலுவலகம் ஒன்றின் விசித்திரமான அறிவிப்பு ஒன்று வெளியாகி, தற்பொழுது பெரும் வைரலாகி வருகிறது. அந்த…

48 minutes ago

“நெருங்கிய மரணம்… அந்தரத்தில் ஊசலாடிய உயிர்…! சீனாவின் 200 அடி உயரப் பேராபத்தில் நடந்தது என்ன…?”

சீனாவின் நான்செங் நகரில் வானில் பாராகிளைடிங் செய்துகொண்டிருந்த நபர் ஒருவர், திடீரென வீசிய பலத்த காற்றினால் தனது கட்டுப்பாட்டை இழந்தார்.…

58 minutes ago

பதவி விலகும் செல்வபெருந்தகை… திமுக – தவெக கூட்டணியால் காங்கிரஸில் வெடித்ததா பூகம்பம்…?! அதிரடி பின்னணி…!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. செல்வபெருந்தகை, தனது பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்து அகில இந்திய காங்கிரஸ்…

1 மணத்தியாலம் ago