“நெருங்கிய மரணம்… அந்தரத்தில் ஊசலாடிய உயிர்…! சீனாவின் 200 அடி உயரப் பேராபத்தில் நடந்தது என்ன…?”

Spread the love

சீனாவின் நான்செங் நகரில் வானில் பாராகிளைடிங் செய்துகொண்டிருந்த நபர் ஒருவர், திடீரென வீசிய பலத்த காற்றினால் தனது கட்டுப்பாட்டை இழந்தார். இதனால் அவர் அருகில் இருந்த கட்டுமானப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஒரு மாபெரும் டவர் கிரேன் மீது எதிர்பாராதவிதமாக மோதினார். இந்த விபத்தில் அவரது பாராசூட் கயிற்றுடன் கிரேனின் மேற்பகுதியில் சிக்கிக்கொண்டதால், அவர் தரையில் இருந்து சுமார் 200 அடி உயரத்தில் அந்தரத்தில் தொங்கும் நிலை ஏற்பட்டது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில், மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தபோது அவர்களுக்குப் பல சவால்கள் காத்துக்கொண்டிருந்தன. கட்டுமானப் பகுதி என்பதால் கீழே பள்ளங்களும் இடிபாடுகளும் நிறைந்திருந்தன, இதனால் கீழே பாதுகாப்பு மெத்தைகளை விரிக்க முடியாத நிலை இருந்தது. இறுதியாக, மீட்புக் குழுவினர் தங்களின் சாதுரியத்தைப் பயன்படுத்தி, 236 அடி நீளமுள்ள பிரம்மாண்ட ஏணியைக் கொண்டு அந்த நபரை நெருங்கினர்.

சுமார் 4 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, இரவு 10 மணியளவில் பாராசூட் கயிறுகளை வெட்டி அந்த நபர் பத்திரமாக மீட்கப்பட்டார். அதிர்ஷ்டவசமாக அவருக்குப் பெரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், நீண்ட நேரம் காற்றில் தொங்கியதால் கடுமையான நீர்ச்சத்து குறைபாட்டிற்கு ஆளாகியிருந்தார். உயிருக்குப் போராடிய இந்த அதிர்ஷ்டகரமான மீட்புப் பணியின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Swetha

Recent Posts

பஞ்சர் கடைக்காரருக்கு ₹100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்… லோன் வாங்க ஆவணம் கொடுத்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

8 minutes ago

BREAKING: எந்த கூட்டணியில் இல்லை… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…

11 minutes ago

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

21 minutes ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

41 minutes ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

47 minutes ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

56 minutes ago