பகீர் சம்பவம்.. டெல்லியில் மீண்டும் ஒரு நிர்பயா கொடூரம்..! ஓடும் பேருந்தில் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. நாடே அதிர்ச்சியில் …!!

Spread the love

டெல்லியில் உள்ள சராய் காலே கான் பகுதியில், பேருந்து ஒன்றில் இளம்பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட அந்த பெண், பேருந்து நிலையத்தின் அருகே தனியாக இருந்தபோது, பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகிய இருவரும் அவருக்கு உதவி செய்வதாகக் கூறி ஆசை வார்த்தை காட்டி பேருந்திற்குள் அழைத்துச் சென்றுள்ளனர்.

பேருந்திற்குள் சென்றவுடன், கதவுகளைப் பூட்டிவிட்டு ஓட்டுநரும் நடத்துனரும் அந்த பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக விரைந்து செயல்பட்டு, பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விவகாரத்தில் டெல்லி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். தலைமறைவாக இருந்த பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பெண்களுக்கு எதிரான இத்தகைய குற்றங்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

Swetha

Recent Posts

BREAKING: விரும்புபவர்கள் பதவி விலகிக்கொள்ளலாம்.. சாட்டையை சுழற்றிய மு.க ஸ்டாலின் ..!!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் உரையாற்றிய அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், கட்சியின் அமைப்பு ரீதியாகப்…

12 minutes ago

“யாராலும் தப்பிக்க முடியாது உலகமே அழிந்துவிடும்” அமெரிக்காவுக்கு சீனா விடுத்த இறுதி எச்சரிக்கை – ஷி ஜின்பிங் பேச்சால் உலக நாடுகளில் நிலவும் பெரும் பதற்றம்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையிலான சந்திப்பு உலக அரங்கில் பெரும் கவனத்தைப்…

15 minutes ago

குடிமகன்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி கூடுதல் விலைக்கு மது விற்றால் என்ன நடக்கும் தெரியுமா..? தமிழக அரசு கடும் எச்சரிக்கை..!!

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில், மதுபாட்டில்களின் விற்பனை விலையை விடக் கூடுதலாக ரூ. 10 முதல் ரூ. 20…

30 minutes ago

அரசுப் பேருந்துகளில் மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்து சேவை தொடரும்… தமிழக அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்து சேவை நிறுத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் பொய்யானது…

31 minutes ago

விலகுகிறேன்..! “முஸ்லிம்களுக்கு அதிமுகவில் அங்கீகாரம் இல்லை” ஜவஹர் அலி அதிரடி ராஜினாமா.. அதிர்ச்சியில் எடப்பாடி..!!

"அதிமுகவில் உண்மையாக உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை; பணம் மற்றும் பகட்டு காட்டுபவர்களுக்கு மட்டுமே எடப்பாடி பழனிசாமி அங்கீகாரம் கொடுக்கிறார்" என்று…

34 minutes ago