தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்கு ஆதரவாக சட்டமன்றத்தில் பேசியதற்காக, மன்னார்குடி தொகுதி அமமுக எம்.எல்.ஏ எஸ். காமராஜை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். தன்னிச்சையாகச் செயல்பட்டு கட்சி ஒழுங்கை மீறியதாகவும், வாக்களித்த மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாகவும் கூறி இந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நீக்கத்தைக் கண்டித்து காமராஜின் ஆதரவாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பல்வேறு இடங்களில் தங்களது பலத்த எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
டிடிவி தினகரனின் இந்த ஒருதலைப்பட்சமான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அமமுகவின் முக்கிய நிர்வாகியும், தலைவராளர் கழக செய்தித் தொடர்பாளருமான அபுதாஹிர் தனது கட்சிப் பதவியையும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பையும் ராஜினாமா செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். எம்.எல்.ஏ காமராஜ் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் பலரும் கூண்டோடு ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதால் அமமுக வட்டாரத்தில் பெரும் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் உள்ள ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், பிறந்து சில நிமிடங்களே ஆன ஒரு…
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் உரையாற்றிய அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், கட்சியின் அமைப்பு ரீதியாகப்…
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையிலான சந்திப்பு உலக அரங்கில் பெரும் கவனத்தைப்…
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில், மதுபாட்டில்களின் விற்பனை விலையை விடக் கூடுதலாக ரூ. 10 முதல் ரூ. 20…
தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்து சேவை நிறுத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் பொய்யானது…
"அதிமுகவில் உண்மையாக உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை; பணம் மற்றும் பகட்டு காட்டுபவர்களுக்கு மட்டுமே எடப்பாடி பழனிசாமி அங்கீகாரம் கொடுக்கிறார்" என்று…