சமூக வலைத்தளங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஸ்டாலின், இனிவரும் காலங்களில் திமுகவின் பிரச்சார பாணி நவீனமடைய வேண்டும் என்று குறிப்பிட்டார். டீக்கடைகளில் அமர்ந்து பேசிய அரசியலை, இப்போது சோசியல் மீடியாவிற்கு கொண்டு செல்ல வேண்டியது அவசியம் என்றும், காலமாற்றத்திற்கு ஏற்ப திமுக தன்னைத் தகவமைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மாநாடுகள் மற்றும் பொதுக்கூட்டங்களை விடவும், சமூக வலைத்தளங்கள் தற்போது வலிமையான தேர்தல் களமாக உருவெடுத்திருப்பதை சமீபத்திய தேர்தல் முடிவுகள் சுட்டிக்காட்டுவதாக அவர் பேசினார்.
கட்சியின் உட்கட்டமைப்பில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ள அவர், திமுகவை அடுத்த நூறு ஆண்டுகளுக்கு உயிர்ப்புடன் வைத்திருக்க இந்த மாற்றங்கள் அவசியம் என்றார். மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே கட்சியின் அதிகார மையமாக இருந்துவிடக் கூடாது என்றும், ஒருவேளை யாராவது சுறுசுறுப்பாகச் செயல்பட இயலாது என்று கருதினால் அவர்களாகவே முன்வந்து பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ளலாம் என்றும் எச்சரிக்கை விடுத்தார். மேலும், கோஷ்டி மோதல்கள் உள்ள இடங்களை அடையாளம் கண்டு அவற்றை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
சமீபத்திய தேர்தலில் தவெக வெற்றிக்கு சமூக வலைத்தளப் பிரச்சாரங்கள் ஒரு முக்கிய காரணமாகப் பார்க்கப்படும் நிலையில், மக்களை நேரடியாகச் சந்திப்பதோடு அவர்களின் மொபைல் போன்களின் வாயிலாகவும் சென்றடைவதே வெற்றிக்கான வழி என ஸ்டாலின் உணர்த்தியுள்ளார். கொள்கைகளை விளக்கும் பிரச்சாரக் களமாக நாடகம், சினிமா, தொலைக்காட்சி எனத் தொடங்கி இப்போது சோசியல் மீடியா வரை திமுக தனது ஸ்டைலை மாற்றிக் கொள்ளத் தயாராகிவிட்டது. வரும் காலங்களில் திமுகவின் ஒவ்வொரு தொண்டரும் இணையதளங்களில் தீவிரமாகச் செயல்பட வேண்டும் என்பதே இக்கூட்டத்தின் முக்கிய செய்தியாக அமைந்தது.
உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் உள்ள ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், பிறந்து சில நிமிடங்களே ஆன ஒரு…
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் உரையாற்றிய அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், கட்சியின் அமைப்பு ரீதியாகப்…
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையிலான சந்திப்பு உலக அரங்கில் பெரும் கவனத்தைப்…
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில், மதுபாட்டில்களின் விற்பனை விலையை விடக் கூடுதலாக ரூ. 10 முதல் ரூ. 20…
தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்து சேவை நிறுத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் பொய்யானது…
"அதிமுகவில் உண்மையாக உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை; பணம் மற்றும் பகட்டு காட்டுபவர்களுக்கு மட்டுமே எடப்பாடி பழனிசாமி அங்கீகாரம் கொடுக்கிறார்" என்று…