“அக்கா என் மானமே போச்சு.. நான் சாகுறேன்.. அவனை விட்றாதீங்க”…. சேலம் ஆசிரியையின் கடைசி கடிதத்தில் கசிந்த அதிர்ச்சி ரகசியம்….!

Spread the love

சேலம் இளம்பிள்ளை பகுதியில் முன்னாள் காதலனின் மிரட்டலால் இளம் ஆசிரியை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பட்டதாரி ஆசிரியையான சண்முகப்பிரியா (22), கௌதம் என்ற இளைஞரை காதலித்து வந்த நிலையில், அவரின் தவறான நடத்தையினால் காதலை முறித்துக் கொண்டார். இருப்பினும், அதனை ஏற்காத கௌதம், சண்முகப்பிரியாவிற்கு வரும் வரன்களைத் தடுத்து நிறுத்தியதோடு, தனிப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் எனத் தொடர்ந்து ஆபாச மிரட்டல் விடுத்து வந்துள்ளார்.

இந்தக் கொடுமைகளைத் தாங்க முடியாமல் மனமுடைந்த சண்முகப்பிரியா, தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். உயிரிழப்பதற்கு முன்னதாக அவர் ஆங்கிலத்தில் எழுதிய நான்கு பக்க உருக்கமான கடிதம் தற்போது வெளியாகியுள்ளது. அதில், “அக்கா, அவனைச் சும்மா விடாதே, என் மானமே போச்சு” என்று அவர் குறிப்பிட்டுள்ள வரிகள் பார்ப்போரின் நெஞ்சைக் கனக்கச் செய்கின்றன. தனது மரணத்திற்கு கௌதம் மட்டுமே காரணம் என்பதை மிகத் தெளிவாக அந்தக் கடிதத்தில் அவர் பதிவு செய்துள்ளார்.

தனது குடும்பத்தினரிடம் மன்னிப்புக் கேட்டுள்ள சண்முகப்பிரியா, “எந்தப் பெண்ணுக்கும் இந்த நிலை வரக்கூடாது; இடையில் வந்த அவன் என் வாழ்க்கையை அழித்துவிட்டான்” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார். கடிதத்தின் ஒவ்வொரு வரிகளிலும் அவர் அனுபவித்த மன உளைச்சலும், ஏமாற்றமும் வெளிப்படுகின்றன. “நான் நன்றாக வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டேன், ஆனால் அவன் என்னை விடவில்லை; என் குடும்பப் பெயரைக் கெடுத்துவிட்டேன்” என்று கூறி தனது இயலாமையை வெளிப்படுத்தியுள்ளார்.

தற்போது இச்சம்பவம் குறித்து மகுடஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலைக்குத் தூண்டியதாகக் கருதப்படும் கௌதம் தலைமறைவாக உள்ள நிலையில், அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு இளம் பெண்ணின் கனவுகளையும் வாழ்வையும் சிதைத்த இச்சம்பவம், சமூக வலைதளங்களின் வாயிலாக அரங்கேறும் மிரட்டல்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் தேவை என்பதை மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறது.

Nanthini

Recent Posts

“மறைக்கப்பட்ட மரணம்..” வெளிவந்த வரதட்சணை கொடுமை..! ஒரு மாதத்திற்குப் பிறகு கல்லறையைத் தோண்டிய போலீஸ்.. பீகாரில் பயங்கரம்…!

பீகார் மாநிலம் சமஸ்திப்பூரில், வரதட்சணை கொடுமையால் கொல்லப்பட்டதாகக் கருதப்படும் இளம்பெண் ஒருவரின் உடலை, அடக்கம் செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு…

13 seconds ago

“கதறிய மாமியார்.. விடாத மருமகன்”… அடுத்த சில நிமிடங்களில் நடந்த கொடூரம்… நள்ளிரவில் மருமகன் செய்த பகீர் காரியம்….!

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அஜ்மத் உசேன் (41). இவருக்கும் தஸ்லீமா பேகம் (35) என்பவருக்கும்…

6 minutes ago

வகுப்பறையா..? படுக்கை அறையா..? படுத்துக்கொண்டு ஹாயாக ரீல்ஸ் பார்க்கும் ஆசிரியை… அரசுப்பள்ளியில் நடந்த அதிர்ச்சி..!!

சமஸ்திபூர் மாவட்டம் சக் சாஹோ பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில், வகுப்பறையின் பின் வரிசை மேஜை மீது படுத்துக்கொண்டு ஆசிரியை…

14 minutes ago

அட்சய திருதியை 2026… தங்கம் வாங்குவதை விட பல மடங்கு பலன் தரும் ‘இந்த’ 3 பொருட்கள்… உடனே இத வாங்கி வைங்க…!

அட்சய திருதியை என்றாலே தங்கம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் பலரிடமும் மேலோங்கி இருக்கிறது. ஆனால், "அட்சயம்" என்பதற்கு குறையாதது…

16 minutes ago

“மட்டன் வேகவே இல்லை” நண்பனின் முன் மனைவியை கேவலமாக திட்டிய கணவர்… மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு..!!!

யவத்மால் மாவட்டத்தின் ஆர்னி தாலுகாவில் உள்ள போர்கான் கிராமத்தில் வசித்து வந்த மனோஜ் என்பவர், தனது நண்பரை இரவு உணவிற்காக…

16 minutes ago

“கொலை செய்துவிட்டேன்” பிணத்தின் அருகே அமர்ந்து கதறல்… காம வெறிக்கு பலியான பாசம்..? ஹோட்டலில் மாமாவை துடிக்க துடிக்க சிதைத்த இளம்பெண்..!!!

ஆக்ராவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் நடந்த இந்த அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவம் கேட்போர் நெஞ்சைப் பதற வைத்துள்ளது. தனது…

19 minutes ago