திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இளம் ஜோடியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரம்பட்டு அருகே உள்ள ராயன்புரம் பகுதியில் வசித்து வரும் மணி என்பவருடைய மகன் மோகன் (26). கூலி தொழிலாளியாக பணியாற்றி வரும் இவரும் அதே பகுதியை சேர்ந்த பிச்சைக்காரன் என்பவரது மகள் பவானி (24) என்பவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் இருவரும் வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பவானியில் பெற்றோர் தங்கள் மகளுக்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த பவானி பெற்றோர் மீது கோபப்பட்டு கடந்த இருபதாம் தேதி பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைத் தொடர்ந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இதனைக் கேட்டு வேதனை அடைந்த காதலன் மோகனம் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் பெற்றோர் காதலுக்கு சம்மதிக்காததால் இளம் காதல் ஜோடிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…