“காசியில் புனித நீராடல்… கையில் ரத்தக்கறை”…. ஆந்திராவையே உலுக்கிய ‘ராங் கால்’ கொலை… சினிமாவையே மிஞ்சும் திரில்லிங் சம்பவம்….!

Spread the love

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த காப்பு லட்சுமி என்ற பெண்ணிற்கு, 15 ஆண்டுகளுக்கு முன்பு பொப்பிலியைச் சேர்ந்த சிவா என்பவருடன் ஒரு தவறான தொலைபேசி அழைப்பு மூலம் அறிமுகம் ஏற்பட்டது. இருவருக்கும் ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருந்த நிலையிலும், சமூக வலைதளங்கள் வாயிலாக இவர்களது நட்பு நாளடைவில் நெருக்கமான முறையற்ற உறவாக மாறியது. வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்த லட்சுமியிடம், கிரிக்கெட் சூதாட்டத்திற்கு அடிமையான சிவா தனது கடன்களை அடைக்க அவ்வப்போது பெரும் தொகையைப் பெற்று வந்துள்ளார்.

சுமார் ஒரு கோடி ரூபாய் வரை சூதாட்டத்தில் இழந்த சிவா, மீண்டும் பணம் கேட்டு லட்சுமியைத் தொந்தரவு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் லட்சுமி பணம் தர மறுத்ததால், அவரைக் கொன்று நகைகளை அபகரிக்க சிவா திட்டமிட்டார். இதற்காகத் திட்டமிட்டு முகக்கவசம் அணிந்து, அடையாளம் தெரியாமல் இருக்க பல ஆட்டோக்களை மாறி மாறி ஏறி லட்சுமியின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஆத்திரமடைந்த சிவா லட்சுமியைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, 5 சவரன் நகைகள் மற்றும் 5 லட்ச ரூபாய் ரொக்கத்தைப் பறித்துச் சென்றார்.

கொலை செய்த பாவத்தைப் போக்க நினைத்த சிவா, நேராகக் காசிக்குத் தப்பிச் சென்றார். அங்கு கங்கை நதியில் புனித நீராடி, காசி விஸ்வநாதருக்குச் சிறப்புப் பூஜைகள் செய்துவிட்டு ஆந்திராவிற்குத் திரும்பினார். இதற்கிடையில், லட்சுமியின் கணவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்ததில் சிவாவின் மீது சந்தேகம் வலுத்தது. தான் பிடிபடுவோம் என்று தெரிந்ததும் ஒரு வீடியோவை வெளியிட்டுவிட்டு, சிவா சென்னைக்குத் தப்பிச் செல்ல முயன்றார்.

விசாகப்பட்டினம் போலீசார் துரிதமாகச் செயல்பட்டு, சென்னைக்குத் தப்ப முயன்ற சிவாவைக் கைது செய்தனர். விசாரணையில், பேராசை மற்றும் சூதாட்ட மோகத்தால் இந்தத் துயரச் சம்பவம் நடந்தது அம்பலமானது. ஒரு தவறான அழைப்பில் தொடங்கிய நட்பு, பணத்தாசையினால் ஒரு உயிரைப் பறிக்கும் அளவிற்குச் சென்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கைதான சிவா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Nanthini

Recent Posts

பேரப்பிள்ளைகள் சொன்னாங்கன்னு ஓட்டுப் போடுறதா.? ஜனநாயகம் வேடிக்கையாகிடுச்சு… ஜனநாயகத்தை வெளுத்து வாங்கிய சீமான்..!!

பேரப்பிள்ளைகள் கேட்டுக்கொண்டார்கள் என்பதற்காக அவர்களுக்கு ஓட்டுப் போட்டதாகச் சிலர் கூறும் அளவுக்குத் தற்போதைய ஜனநாயகம் வேடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது என்று…

6 மணத்தியாலங்கள் ago

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு: நாளை கடையடைப்பு.. தமிழகத்தில் 5,000 கடைகள் இயங்கும்..!!

ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் நாளை (மே…

6 மணத்தியாலங்கள் ago

BREAKING: உணவகத்தில் ஏசி வெடித்து விபத்து… 1 லட்சம் நிதியுதவி அறிவித்தார் CM விஜய்..!!

தஞ்சாவூர் கேஎஃப்சி (KFC) உணவகத்தில் ஏற்பட்ட ஏசி வெடிப்பு விபத்தில் உயிரிழந்த ரவி ராஜ் என்பவரின் குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர்…

6 மணத்தியாலங்கள் ago

“லேட்டா வந்தா அவ்ளோதான்”.. முதலமைச்சர் விஜய்யின் ‘பங்ச்சுவாலிட்டி’ உத்தரவால் பரபரப்பு.. தலைமைச் செயலகத்தில் அதிரடி மாற்றம்..!!

தமிழக முதலமைச்சராகப் விஜய் பதவி ஏற்றுள்ளதைத் தொடர்ந்து, அவர் தினமும் காலை 9.30 மணி முதல் 10 மணிக்குள் மிகச்…

7 மணத்தியாலங்கள் ago

நீதி எங்கே போகிறது? சிறையில் இருந்து வந்த பாலியல் கைதிக்கு ஹீரோ ரேஞ்சுக்கு வரவேற்பு அளித்த ஆதரவாளர்கள்: வைரல் வீடியோவால் கொதிக்கும் நெட்டிசன்கள்..!

உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர்,…

7 மணத்தியாலங்கள் ago

தினமும் பெட்ரோல் குடிக்கும் பெண்… “இது இல்லைனா எனக்கு தூக்கமே வராது” என அதிர வைக்கும் இளம்பெண்ணின் பகீர் போதை.!!

கனடாவைச் சேர்ந்த ஷானன் என்ற இளம் பெண், தினமும் பெட்ரோல் குடிக்கும் விசித்திரமான மற்றும் ஆபத்தான பழக்கத்திற்கு அடிமையாகி சமூக…

7 மணத்தியாலங்கள் ago