திருப்பூர் மாவட்டம் பிச்சம்பாளையம் புதூர் பகுதியை சேர்ந்த குரு சங்கர் என்பவர் திருப்பூர் ஸ்ரீ நகர் பகுதியில் உள்ள மசூதிக்கு பின்புறம் ஒரு நிட்டிங் கம்பெனி வைத்து நடத்தி வருகின்றார். அந்த கம்பெனியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு துர்நாற்றம் வீசிய நிலையில் அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் கம்பெனி கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது அழகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கிடந்துள்ளது. பிறகு சடலத்தை கைப்பற்றிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில் சடலம் கிடந்த தனியார் நெட்டிங் கம்பெனி குருசங்கர் என்பவருக்கு சொந்தமானது என்றும் கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தி வந்ததும் தெரிய வந்துள்ளது. அதேசமயம் குருசங்கரி நம்பர் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த காமராஜ் என்பவர் அடிக்கடி அங்கு வந்து தன்னுடைய நண்பருக்கு உதவியாக இருந்து வந்துள்ளார். அதேபோல கடந்த 19ஆம் தேதி குரு சங்கர் ஊருக்கு சென்று இருந்த நிலையில் கம்பெனிக்கு வந்த காமராஜ் வேலைகளை முடித்துவிட்டு அங்கு பணியாற்றிய வடமாநில தொழிலாளர் பப்புஸ் என்பவருடன் சேர்ந்து அன்றைய நாள் முழுவதும் மது அருந்தியுள்ளார்.
அந்த சமயத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த பப்புஷ் அருகில் இருந்த சுத்தியலை எடுத்து காமராஜின் தலையில் தாக்கியுள்ளார். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததால் பப்புஸ் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். தற்போது வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
உங்களுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதும், இந்த நாள் இவ்வளவு சிரமமாக அமைந்ததும் வருத்தமளிக்கிறது. காய்ச்சலோடு அதிகாலையிலேயே விழிப்பதும், உடம்பில் தெம்பே…
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ராஜ்பாத் நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் அமைந்துள்ள விண்ட்சர் பாரடைஸ் குடியிருப்பு லிஃப்ட்டில், செல்லப்…
தாய்லாந்தின் புகழ்பெற்ற நீர்வீழ்ச்சி பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணி ஒருவரின் தோளில் எதிர்பாராதவிதமாக வௌவால் ஒன்று வந்து அமர்ந்தது. பயத்தில்…
தந்தையின் அன்பு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத தூய்மையானது. தன் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காகத் தன் சொந்த ஆசைகளைக்கூடப் புன்னகையோடு தியாகம் செய்யும்…
மும்பையின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் வழிபடப்படும் லால்பாக் சா ராஜா விநாயகர் சதுர்த்தி 2026 விழாவை முன்னிட்டு, முக்கியப் பிரமுகர்கள்…
மும்பையின் மிகவும் புகழ்பெற்ற லால்பாக் சா ராஜா விநாயகர் பந்தலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாலிவுட் நடிகரும் சண்டைக்கலைஞருமான வித்யுத்…