திருப்பூர் மாவட்டம் பிச்சம்பாளையம் புதூர் பகுதியை சேர்ந்த குரு சங்கர் என்பவர் திருப்பூர் ஸ்ரீ நகர் பகுதியில் உள்ள மசூதிக்கு பின்புறம் ஒரு நிட்டிங் கம்பெனி வைத்து நடத்தி வருகின்றார். அந்த கம்பெனியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு துர்நாற்றம் வீசிய நிலையில் அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் கம்பெனி கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது அழகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கிடந்துள்ளது. பிறகு சடலத்தை கைப்பற்றிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில் சடலம் கிடந்த தனியார் நெட்டிங் கம்பெனி குருசங்கர் என்பவருக்கு சொந்தமானது என்றும் கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தி வந்ததும் தெரிய வந்துள்ளது. அதேசமயம் குருசங்கரி நம்பர் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த காமராஜ் என்பவர் அடிக்கடி அங்கு வந்து தன்னுடைய நண்பருக்கு உதவியாக இருந்து வந்துள்ளார். அதேபோல கடந்த 19ஆம் தேதி குரு சங்கர் ஊருக்கு சென்று இருந்த நிலையில் கம்பெனிக்கு வந்த காமராஜ் வேலைகளை முடித்துவிட்டு அங்கு பணியாற்றிய வடமாநில தொழிலாளர் பப்புஸ் என்பவருடன் சேர்ந்து அன்றைய நாள் முழுவதும் மது அருந்தியுள்ளார்.
அந்த சமயத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த பப்புஷ் அருகில் இருந்த சுத்தியலை எடுத்து காமராஜின் தலையில் தாக்கியுள்ளார். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததால் பப்புஸ் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். தற்போது வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
சென்னை நந்தனத்தில் இன்று (ஏப்ரல் 21) நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்டு பேசிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்,…
சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி,…
ஐபிஎல் 2026 சீசன் தொடங்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியளிக்கும் விதமாக, இளம் நட்சத்திர…
நோய்டாவைச் சேர்ந்த ஆதர்ஷ் என்ற இளைஞர், சுமார் ஒரு கோடி ரூபாய் செலவழித்து வாங்கிய தனது சொகுசு ஃபிளாட்டின் (Flat)…
மதுரை மத்திய தொகுதி NDA (தேசிய ஜனநாயகக் கூட்டணி) வேட்பாளரான இயக்குநர் சுந்தர் சி மீது, வழக்கறிஞர் வாஞ்சிநாதன் சுமார்…
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான டாக்டர் ராமதாஸ், தேர்தல் நெருங்கும் வேளையில் "மாம்பழத்தில் விஷம்" எனும் தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கை…