“கறிக்குழம்பு வைக்கலையா?”…. ஒரு கிண்ணம் குழம்புக்காக மனைவியை உயிரோடு முடித்த கணவன்… நெஞ்சை நடுங்க வைக்கும் கொடூரம்….!

Spread the love

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் வண்டூர் அருகே உள்ள பாரசேரி பகுதியைச் சேர்ந்த ரஷீத் என்பவர், கறிக்குழம்பு சமைக்காத ஆத்திரத்தில் தனது மனைவி பசீலாவை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மதுப்பழக்கம் கொண்ட ரஷீத், தினமும் மது அருந்திவிட்டு வந்து மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபடுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

சம்பவத்தன்று பணிக்குச் செல்லும் முன், மதிய உணவுக்குக் கறிக்குழம்பு சமைத்து வைக்குமாறு மனைவியிடம் ரஷீத் கூறியுள்ளார். ஆனால், மதியம் அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது கறிக்குழம்பு சமைக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ரஷீத், மனைவி பசீலாவிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரைத் தாக்கத் தொடங்கியுள்ளார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில், மனைவி எதிர்த்துப் பேசியதால் மேலும் கோபமடைந்த ரஷீத், சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து பசீலாவைச் சரமாரியாகக் குத்தியுள்ளார். கணவனின் திடீர் தாக்குதலைத் தடுக்க முயன்றும் முடியாத பசீலா, பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சைப் பலனின்றி பசீலா பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் வண்டூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மனைவியைப் படுகொலை செய்துவிட்டுத் தப்பியோட முயன்ற ரஷீத்தைக் காவல் துறையினர் உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Nanthini

Recent Posts

இதென்ன புது ட்ரெண்டா இருக்கு…? ராஜினாமா செய்தால் புதிய ஆள் எடுக்க மாட்டீங்களா…? கார்ப்பரேட் நிறுவனங்களைக் கிழித்த மும்பை பெண் சி.ஏ…!!

நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டுச் சென்றாலோ அல்லது வேலையை விட்டு நீக்கப்பட்டாலோ, அந்த…

38 minutes ago

“பேசாம இந்தியாவுக்கே போயிட்டு வரலாம்…” ஒரு பல்லை பிடுங்குவதற்கு இத்தனை லட்சமா…? அமெரிக்க மருத்துவமனையின் கட்டணத்தை பார்த்துத் தலைசுற்றிப்போன NRI…!!

அமெரிக்காவில் கடந்த 15 ஆண்டுகளாக வசித்து வரும் நிதின் மல்ஹோத்ரா என்ற இந்தியர், அங்குள்ள மருத்துவக் கட்டணங்களின் கொடூர நிதர்சனத்தைச்…

51 minutes ago

“இன்ஸ்டா ஸ்டிக்கரால் கிடைத்த லேப்டாப்…” நெட்டிசன்களின் இதயங்களை வென்ற ஆட்டோ ஓட்டுநரின் செயல்…! சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நெகிழ்ச்சி சம்பவம்…!!

இரவு நேரத்தில் பெய்த கனமழைக்கு நடுவே, வாலிபர் ஒருவர் தனது பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, பைக்கின் பின்னால் அமைக்கப்பட்டிருந்த…

1 மணத்தியாலம் ago

அய்யய்யோ… டெரஸில் கிரில் வைக்கக் கூடாதுனு… இவ்வளவு பெரிய அக்கிரமமா?… பெண்ணை அடித்துத் துவைக்கும் பகீர் வீடியோ… நலசோபராவில் கொதித்தெழுந்த மக்கள்…!

நலசோபரா கிழக்கு பகுதியிலுள்ள ஒய்.பி. நகர் டெரஸில் கிரில் அமைப்பது தொடர்பாக இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட தகராறில் பெண் ஒருவர்…

1 மணத்தியாலம் ago

ஐயோ… நீதி கேட்கக் கூடாதா சார்?… முதல்வர் வருகையின்போது கதறி அழுத… கொல்லப்பட்ட சிறுவனின் பெற்றோர் மீது… பெண் காவலர் நடத்திய அதிர்ச்சித் தாக்குதல்… உ . பி – யில் பரபரப்பு…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஃபரூக்காபாத் மாவட்டத்தில் முதலமைச்சர் யோகி ஆதிநாத்தின் வருகையின்போது, 9 மாதங்களுக்கு முன்பு கொல்லப்பட்ட 10 வயது…

1 மணத்தியாலம் ago

அடே… என் மச்சான் யாருன்னு உனக்குத் தெரியுமா?… சமூக வலைதள வீரரை அடித்து துவம்சம் செய்த அதிரடி மோதல்… இணையத்தில் வீடியோ வைரல்…!

உத்தரப்பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு குடும்பத் தகராறு இணையத்தில் பெரும் வைரலாகியுள்ளது. கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட மோதலில், மனைவி…

2 மணத்தியாலங்கள் ago