ஆந்திராவில் திருமணமான 6 மாதங்களில் கணவருடைய குடும்பத்தின் தொடர் கொடுமையால் பேராசிரியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இறப்பதற்கு முன்பாக தன்னுடைய சகோதரருக்கு அவர் தற்கொலை கடிதம் எழுதி உள்ளது பலரையும் நெகிழ வைத்துள்ளது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்த 25 வயது பேராசிரியர் ஸ்ரீவித்யா. கிராம நிர்வாக அதிகாரியான ராம்பாபு என்பவரை 6 மாதங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணம் ஆன ஒரே மாதத்தில் ராம்பாபு மது போதையில் ஸ்ரீவித்யாவை அடித்து உடல் மற்றும் மனரீதியாக துன்புறுத்துள்ளார்.
இதனால் மனமுடைந்த ஸ்ரீவித்யா தற்கொலை செய்துகொண்டார். அவர் தற்கொலை கடிதத்தில் எழுதியுள்ளதாவது, ” ராம்பாபு மற்றவர்கள் முன்னிலையில் தன்னை அவமதித்து, நீ எதற்கும் லாயக்கில்லை. உன்னால் எந்த மதிப்பும் இல்லை என்று கூறியதாகவும், இதனால் மனமடைந்து போன தான் தன்னுடைய உயிரை மாய்த்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார். மேலும் அண்ணா அடுத்த வருடம் நான் உனக்கு ராக்கி கட்ட முடியாமல் போகலாம் என்று எழுதியுள்ளார். தன்னுடைய இந்த முடிவிற்கு கணவர் ராம்பாவும் மற்றும் அவருடைய குடும்பத்தினர் தான் முழு காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். அந்த குடும்பத்தில் யாரையும் விட்டுவிடக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…
ஈராக் நாட்டின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஹிந்த் அல்-அப்பாஸி என்பவரது வீட்டில் நடத்தப்பட்ட அதிரடி ஊழல் தடுப்பு சோதனையில், தங்க…
தமிழகத்தில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சியைத் கவிழ்க்கும் நோக்கில் அக்கட்சியின் எம்.எல்.ஏக்களிடம் பல கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாக…
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, மாநிலத்தின் அரசியல் களம் நாளுக்கு நாள் பல்வேறு அதிரடி திருப்பங்களுடன் அனல் பறந்து…