அண்ணா..! இனி உனக்கு ராக்கி கட்டிவிட முடியாது… ஆனா அவங்க யாரையும் சும்மா விட்டுறாத… அண்ணனுக்கு கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்துகொண்ட பெண்..!!

Spread the love

ஆந்திராவில் திருமணமான 6 மாதங்களில் கணவருடைய குடும்பத்தின் தொடர் கொடுமையால் பேராசிரியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இறப்பதற்கு முன்பாக தன்னுடைய சகோதரருக்கு அவர் தற்கொலை கடிதம் எழுதி உள்ளது பலரையும் நெகிழ வைத்துள்ளது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்த 25 வயது பேராசிரியர் ஸ்ரீவித்யா. கிராம நிர்வாக அதிகாரியான ராம்பாபு என்பவரை 6 மாதங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணம் ஆன ஒரே மாதத்தில் ராம்பாபு மது போதையில் ஸ்ரீவித்யாவை அடித்து உடல் மற்றும் மனரீதியாக துன்புறுத்துள்ளார்.

இதனால் மனமுடைந்த ஸ்ரீவித்யா தற்கொலை செய்துகொண்டார். அவர் தற்கொலை கடிதத்தில் எழுதியுள்ளதாவது, ” ராம்பாபு மற்றவர்கள் முன்னிலையில் தன்னை அவமதித்து, நீ எதற்கும் லாயக்கில்லை. உன்னால் எந்த மதிப்பும் இல்லை என்று கூறியதாகவும், இதனால் மனமடைந்து போன தான் தன்னுடைய உயிரை மாய்த்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.  மேலும் அண்ணா அடுத்த வருடம் நான் உனக்கு ராக்கி கட்ட முடியாமல் போகலாம் என்று எழுதியுள்ளார். தன்னுடைய  இந்த முடிவிற்கு கணவர் ராம்பாவும் மற்றும் அவருடைய குடும்பத்தினர் தான் முழு காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். அந்த குடும்பத்தில் யாரையும் விட்டுவிடக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Soundarya

Recent Posts

காக்கிச் சட்டையில் கறை..! 30 லட்சம் கடனுக்காக ரியல் எஸ்டேட் அதிபர் கொலை.. தெலங்கானாவை உலுக்கிய போலீஸ் தம்பதியின் கைவரிசை…!

தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…

10 மணத்தியாலங்கள் ago

“தோசை சுட்டுத் தர மறுத்துவிட்டேன்..!” தந்தை வினு சக்கரவர்த்தியின் கடைசி ஆசை குறித்து மகள் உருக்கம்…!

தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…

10 மணத்தியாலங்கள் ago

தளபதி பக்கம் சாய்ந்த திருமாவளவன்..! ஸ்டாலினுக்குப் புதிய தலைவலி தவெக ஆட்சி அமையுமா..?

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…

10 மணத்தியாலங்கள் ago

கூவத்தூர் 2.0: புதுச்சேரி சொகுசு பங்களாவில் 30 எம்.எல்.ஏ-க்கள்..! விஜய்க்கு செக் வைத்த எடப்பாடி பழனிசாமி…!

தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…

10 மணத்தியாலங்கள் ago

மெஜாரிட்டி டிராமா.. பின்னணியில் அமித் ஷா..? ஆளுநருக்கு எதிராக தமிழகத்தில் வெடிக்கும் புதிய புரட்சி…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…

10 மணத்தியாலங்கள் ago

“அங்குட்டு ஆளுநர்.. இங்குட்டு ஸ்டாலின்..! சிக்கலில் விஜய்.. 5 எம்.எல்.ஏ-க்களுக்காக நடக்கும் பலப்பரீட்சை…!”

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…

11 மணத்தியாலங்கள் ago