கோர்ட்டில் அரங்கேறிய கூத்து… இன்னைக்கு நான் தான்… நீதிபதி சீட்டில் அமர்ந்த பெண் செய்த ரகளையால்… நீதிமன்றத்தில் பரபரப்பு…!!

Spread the love

வாரணாசி நீதிமன்றத்தில் பெண் ஒருவர் நீதிபதியின் நாற்காலியில் அமர்ந்து ரகளை செய்த விசித்திரமான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நீதிமன்ற அறைக்குள் நுழைந்த அந்தப் பெண், திடீரென மாவட்ட நீதிபதியின் இருக்கையில் போய் அமர்ந்து கொண்டார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நீதிமன்ற ஊழியர்களும் வழக்கறிஞர்களும் அவரை கீழே இறங்குமாறு எவ்வளவோ வற்புறுத்தியும், அவர் கேட்காமல் பிடிவாதம் பிடித்தார்.

அந்த இருக்கையில் அமர்ந்துகொண்டு, “இன்று நான் தான் மாவட்ட நீதிபதி, நானே தீர்ப்பு வழங்குவேன்” என்று அந்தப் பெண் சத்தமாகக் கூறினார். மேலும், அங்கிருந்த மேஜையைத் தட்டி, நீதிமன்றப் பாணியில் “ஆர்டர், ஆர்டர்” என்றும் கத்தினார். அவரை அங்கிருந்து அகற்ற முயன்ற பெண் காவலர்கள் மற்றும் ஊழியர்களுடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவர்களைத் தாக்க முற்பட்டதால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, பெண் போலீசார் அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக நாற்காலியில் இருந்து இறக்கி, நீதிமன்ற அறையை விட்டு வெளியே அழைத்துச் சென்றனர். விசாரணையில், அந்தப் பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது. இந்த முழுச் சம்பவத்தையும் அங்கிருந்த யாரோ ஒருவர் தனது மொபைல் போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர, அது தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

Swetha

Recent Posts

குஷியோ குஷி தமிழகம் முழுவதும் அடுத்த 3 மாதங்களில்… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!

தமிழகத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில், அடுத்த 3 மாதங்களுக்குள் புதிதாக 2,000 மின்சார ஏசி பஸ்களை…

3 minutes ago

4 மாசமா யாருக்குமே தெரியல… பர்தாவுக்குள் ஒளிந்திருந்த பகீர் உண்மை… 50 சவரன் நகையை நைசாக சுருட்டிய ‘நவநாகரீக’ பெண்… சென்னையில் அடுத்தடுத்து நடந்த அதிரடி கைதுகள்…!

சென்னை வியாசர்பாடியில் உள்ள பிரபல நகைக் கடையில் கடந்த நான்கு மாதங்களாக வாடிக்கையாளர் போல பர்தா அணிந்து வந்து, ஊழியர்களின்…

13 minutes ago

“உன் கழுத்தை அறுத்துடுவேன்டா”…பள்ளி சிறுமிகளுக்கு நேர்ந்த கொடுமை… சிக்கிய 3 காமுகர்கள்… நீதிமன்ற வளாகத்தில் ஆவேசமடைந்த தந்தை… கதிகலங்கி நின்ற போக்சோ கைதி…!

விழுப்புரம் மாவட்டத்தில் சிறுமிகளுக்கு எதிராக அரங்கேறிய அடுத்தடுத்த பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக, கடந்த சனிக்கிழமை (ஜூலை 04) ஒரே நாளில்…

51 minutes ago