திருவண்ணாமலை தவெக வேட்பாளர் அருள் ஆறுமுகம், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தவெகவில் இணைக்கப்பட்டதைக் கடுமையாக எதிர்த்து, “அவரை கட்சியில் இணைத்ததன் மூலம் அவர் மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்காத உத்தமர் என்று முதல்வர் விஜய் அங்கீகரிக்கிறாரா?” என அதிரடிக் கேள்வியை எழுப்பியுள்ளார்.
மேலும், “நாளை எ.வ.வேலுவும் தவெகவில் சேர்ந்தால் அவர் தூயசக்தி ஆகிவிடுவாரா?” என்று கொந்தளித்துள்ள அவர், “இதுதான் நீங்கள் பேசும் மாற்றமா?” எனத் தன் சொந்தக் கட்சித் தலைமையையே சாடியுள்ளார். ஏற்கெனவே தவெக அரசைத் தொடர்ந்து குற்றம் சுமத்தி வரும் அருள் ஆறுமுகத்தின் இந்த தற்போதைய ஆவேசப் பேச்சு, தவெகவின் அரசியல் நிலைப்பாடு மற்றும் கொள்கை ரீதியான நம்பகத்தன்மை குறித்து அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் விவாதத்தையும் அரசியல் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் குர்கானைச் சேர்ந்த 21 வயது இளைஞரான மோனு, கடந்த ஜூன் 8-ஆம் தேதி இரவு மருந்து வாங்குவதற்காக…
விழுப்புரம் மாவட்டத்தில் சிறுமிகளுக்கு எதிராக அரங்கேறிய அடுத்தடுத்த பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக, கடந்த சனிக்கிழமை (ஜூலை 04) ஒரே நாளில்…
தமிழக வெற்றிக் கழக ஆட்சியை கவிழ்க்க சதித் திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும்…
மத்திய அமைச்சரவையில் விரைவில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக டெல்லி அரசியல் வட்டாரங்களில் பரவி வரும் தகவல் பெரும் பரபரப்பை…
ஈரோடு மாவட்டம், வெண்டிபாளையம் சீனிவாசராவ் வீதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு, முதல் மனைவி குமுதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக…
மயிலாடுதுறை அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மூன்று வயது ஆண் குழந்தையைத் தாயும் அவரது கள்ளக்காதலனும் அடித்துக் கொலை செய்துவிட்டு,…