கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் மகாவீர் காலனியைச் சேர்ந்த அவினாஷ் (28) என்பவரும், ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்து வந்தனர். இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இவர்களுக்குத் திருமணம் நடைபெற்றது. இந்நாட்களில், அப்பெண்ணின் சொந்த ஊரில் கோவில் திருவிழா நடந்ததால், அவர் தன் பெற்றோர் வீட்டிற்குச் சென்றிருந்தார். ஆனால் ஒரு வாரத்திற்கு மேலாகியும் அவர் கணவர் வீட்டிற்குத் திரும்பி வரவில்லை.
மனைவி சரியாகப் பதில் அளிக்காததால், அவினாஷ் தன் பெற்றோருடன் மனைவியின் ஊருக்கு நேரில் சென்று அவரைத் தன்னுடன் குடும்பம் நடத்த அழைத்துள்ளார். ஆனால், அப்பெண் அவினாசுடன் வாழப் பிடிக்கவில்லை என்றும், அவருடன் குடும்பம் நடத்த வர முடியாது என்றும் மறுத்துள்ளார். இதனால் தீவிர மன உளைச்சலுக்கு ஆளான அவினாஷ், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் சேலையால் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
வீட்டிற்கு வந்த பெற்றோர், அவினாஷ் தூக்கில் பிணமாகத் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து குனிகல் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவின் பெருமையை சர்வதேச அளவில் மீண்டும் நிலைநிறுத்தும் வகையில், வான்வெளியில் ஒரு மகத்தான உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. உலகளவில் சுமார்…
தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுகவில் அமைப்பு ரீதியான மாற்றங்களை மேற்கொள்வது குறித்து மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இடையே முக்கிய…
கேரள பாஜக மாநிலத் துணைத் தலைவரும் பிரபல நடிகருமான தேவன், அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும்…
திரைப்பட நடிகை த்ரிஷாவுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் என அதிமுக மூத்த தலைவர் ஆர்.பி. உதயகுமார் வெளியிட்ட பேச்சு…
கர்நாடக மாநிலம் பெங்களூருவின் சிக்கா டுகொடி பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 3-வது மாடியில் வசித்து வரும் தம்பதியினருக்கு 1.5…
கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த ஆறு மாதங்களாக மழை பெய்யாததால் கடுமையான வறட்சியும், குடிநீர் தட்டுப்பாடும் நிலவி…