1972-ல நடந்த சோகம்…. “என் கணவர் இறந்து 54 வருஷம் ஆச்சு”…. கண்ணீருடன் ஆட்சியரிடம் கதறிய 85 வயது உச்சிமகாளி…. இந்த வயசுல இப்படியா…..?

Spread the love

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையைச் சேர்ந்த குப்புசாமி, பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராகப் பணியாற்றி வந்தார். கடந்த 1972-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, அலுவலகத்தில் தேசியக் கொடியேற்றுவதற்காகக் கொடிகம்பம் நடும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்ததில் குப்புசாமி உட்பட மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் நடந்து அரை நூற்றாண்டுக்கும் மேலாகிவிட்ட நிலையிலும், அவரது குடும்பத்திற்கு அரசு சார்பில் கிடைக்க வேண்டிய உரிய நிவாரணமும் உதவிகளும் இன்னும் சென்று சேரவில்லை.

கணவரின் திடீர் மறைவால் வறுமையிலும் கடும் மன உளைச்சலிலும் தவித்து வரும் அவரது மனைவி உச்சிமகாளி, கடந்த 54 ஆண்டுகளாக அரசு அலுவலகங்களின் கதவுகளைத் தொடர்ந்து தட்டி வருகிறார். இந்நிலையில், நேற்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அவர், மீண்டும் ஒரு கோரிக்கை மனுவை அளித்துள்ளார். அம்மனுவில், தன் கணவர் பணியின் போது உயிரிழந்ததால் அவருக்குச் சேர வேண்டிய உரிய நஷ்ட ஈட்டையும், குடும்பத்திற்கு வாழ்வாதாரமாக விளங்கக்கூடிய ஓய்வூதியத்தையும் உடனடியாக வழங்கிட வேண்டும் எனக் கண்ணீருடன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Nanthini

Recent Posts

அதிகாலையில் பயங்கரம்…!! ஆட்டோ டிரைவரை சுற்றி வளைத்த கும்பல்… ஒரே நாளில் இரட்டை கொலைகள்…. பின்னணி என்ன…? பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…

1 மணத்தியாலம் ago

ஐயோ… என் வாழ்க்கையையே ஏமாத்திட்டியா?… ரயிலில் அம்பலமான மனைவியின்… ரகசிய முகத்தால் உடைந்த கணவன்…!

ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…

1 மணத்தியாலம் ago

“காட்டுக்குள்ள அரசு வேலை நடக்குதா…?” வேறொருவர் மனைவியை அழைத்து சென்ற பஞ்சாயத்து தலைவர்…. பின் தொடர்ந்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…

1 மணத்தியாலம் ago

ஐயோ… என்னால துக்கத்தைத் தாங்க முடியல… தற்கொலை பண்ணிக்க தோணுது… பெண் சப்-இன்ஸ்பெக்டரின் கண்ணீர் வீடியோ… மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…

1 மணத்தியாலம் ago

“என்னை விடுங்க…” புல் அறுக்க சென்ற பெண்… கை,கால்களை பிடித்து அடிக்கும் வாலிபர்கள்… கதறி துடித்த சோகம்… பதற வைக்கும் வீடியோ வைரல்…!!

சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ கடவுளே… காது சியாம்ஜி தரிசனம் முடிந்து… திரும்பியபோது நேர்ந்த கோர விபத்து… காவலரின் சகோதரன் உட்பட 6 பேர் பரிதாப பலி… கதற வைக்கும் சோகம்…!!

குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…

2 மணத்தியாலங்கள் ago