உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் சுனில். இவருக்கு கடந்த மே மாதம் குஷ்பூ என்பவரோடு திருமணம் நடந்தது .திருமணமான ஒன்பது நாட்கள் கணவர் வீட்டில் தங்கி இருந்த குஷ்பூ திருமண சடங்கிற்காக தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தன்னுடைய காதலனுடன் வீட்டை விட்டு ஓடியுள்ளார். இதனையடுத்து தன்னுடைய மனைவியை காணவில்லை என்று சுனில் காவல் நிலையத்தில் புகார் அளித்த போது தான் குஷ்பூ தன்னுடைய காதலனோடு காவல் நிலையத்திற்கு வந்து உள்ளார். பின்பு தனக்கு சுனிலை பிடிக்கவில்லை காதலனோடு சேர்ந்து வாழ ஆசைப்படுகிறேன் என்று கூறியிருக்கிறார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சுனில் தன்னுடைய மனைவியை காதலனோடு சேர்ந்து வாழுமாறு கூறி அனுப்பி வைத்துள்ளார். மேலும் திருமணத்தின் போது போடப்பட்ட நகைகளையும் கொடுத்துள்ளார். அதன் பிறகு அந்த நகைகளை எல்லாம் வாங்கிக்கொண்டு குஷ்பூ தன்னுடைய காதலனோடு சென்று ள்ளார். பின்னர் இதுகுறித்து சுனில் கூறுகையில், “ஹனிமூன் போகலாம் என்றெல்லாம் கனவு கண்டேன். குஷ்புவை சர்பிரைஸ் செய்யலாம் என்றும் ஆசைப்பட்டேன்.
அதற்குள் இப்படி நடந்து விட்டது. அதனால் தான் காதலனோடு அனுப்பி வைத்துவிட்டேன். நல்லவேளை ராஜாவை போல நான் ஆகவில்லை. ஹனிமூன் போகாமல் நான் உயிரோடு பிழைத்து இருக்கிறேன். இன்னொரு ராஜா ரகுவன்சியாக நான் ஆகவில்லை .என்னுடைய வாழ்க்கை காப்பாற்றப்பட்டது” என்று பேசி இருக்கிறார்.
இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியின் போது, தேசிய கீதம் இசைக்கப்பட்ட சமயம் வைபவ் சூர்யவன்ஷிக்கு…
மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள லோகாட் கோட்டை பகுதியில், இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியை வீழ்த்த ஆளுங்கட்சியான திமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலத் தகராறு காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது வயதான தந்தையை…
இந்தூர் மாவட்டம் கம்பேல் பகுதியில் உள்ள ஒரு திருமண ஊர்வலத்தின் போது, குதிரை ஒன்று நடனமாட மறுத்ததால் அதன் உரிமையாளர்…
திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில்…