‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சேதுராமன். எம்பிபிஎஸ் எம்டி படித்த இவர் மும்பை மற்றும் சிங்கப்பூரில் தோல் சிகிச்சை அளிக்கும் பயிற்சி பெற்றிருந்தார். இவருக்கு கடந்த 2016ல் திருமணம் முடிந்தது. உமையாள் என்கிற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.
இப்படத்திற்கு பிறகு இவர் வாலிப ராஜா, சக்கபோடு போடு ராஜா மற்றும் 50|50 ஆகிய படங்களில் நடித்துள்ளார். நடிகர் சந்தானமும் சேதுராமனும் நெருங்கிய நண்பர்கள். இவர் மருத்துவராக பயிற்சி பெற்றிருந்தாலும் இவருக்குள் ஒரு நடிகன் இருப்பதை கண்டுபிடித்து இவர் நடிகராக மக்கள் மத்தியில் பிரபலமானார்.
தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டும் மருத்துவ வேலை செய்து கொண்டும் தனது கனவை நோக்கி பயணித்து வந்த சேதுராமன் 2020ல் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். தற்பொழுது இவரது மனைவி உமா சேதுராமன் தனது கணவர் தொடங்கிய மருத்துவமனையை கவனித்துக் கொண்டு வருகிறார். இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய கணவர் பற்றி எப்பொழுதும் பதிவுகளை பகிர்ந்து வருகிறார்.
சென்னை முழுவதும் தற்பொழுது மிக்ஜாம் புயலால் சிக்கி தவித்து வருவதை நாம் அறிவோம். தற்பொழுது நடிகர் சேதுராமனின் மனைவி தனது இன்ஸ்டா பக்கத்தில், ‘ Need help @ Egret park – Anand nagar , Thoraipakkam . 40 families in the community . And we are not able to reach the families from morning . Water has reached 1 st floor and increasing .’ என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது, ‘ உதவி தேவைப்படுவதாகவும், 40 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வெள்ளத்தில் சிக்கி தவிப்பதாகவும்’ கூறியுள்ளார். இதோ அவரின் பதிவு…
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற ரூ.75,000 வரையிலான பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதற்கான அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி,…
மத்திய அரசின் 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தின் கீழ், ரேஷன் கார்டுதாரர்கள் இனி தங்களுக்குரிய உணவுப் பொருட்களைப்…
கோயம்புத்தூர் மாவட்டம் சிறுமுகை அருகே மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் உள்ள ராசிபுரம் பகுதியில், மூடப்பட்டுக் கிடக்கும் தனியாருக்குச் சொந்தமான…
இந்தியாவில் சமையல் எரிவாயு அத்தியாவசிய தேவையாக உள்ள நிலையில், ஒரே வீட்டில் பைப்லைன் மூலமாக வரும் PNG கேஸ் மற்றும்…
அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார் என்று அரசியல் வட்டாரங்களில் பரவலாகப்…
கேரள மாநிலம் திருச்சூரில் செயல்பட்டு வந்த சட்டவிரோத விபச்சார விடுதி ஒன்றில் ஏற்பட்ட தகராறில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த…