மகாராஷ்டிர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்து வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக, புனே மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில், புனேவின் தலேகான் தபாடா பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட ஒரு சாலையில், நிலத்தடி நீர் குழாய் சோதனை செய்யப்பட்டபோது எதிர்பாராதவிதமாக குழாய் உடைந்து தண்ணீர் மிகப்பெரிய அளவில் மேல்நோக்கி பீறிட்டு அடித்தது. சாலையில் நீர் ஊற்று போல பல அடி உயரத்திற்கு தண்ணீர் பாய்ந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, இதுகுறித்த காணொளிகளும் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.
இதற்கிடையில், மாநிலத்தின் வானிலை நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தீவிர எச்சரிக்கையை விடுத்துள்ளது. புனே, மும்பை நகரம், மும்பை புறநகர், தானே, ராய்கட் மற்றும் பால்கர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று பிற்பகல் 1 மணி வரை ‘சிவப்பு எச்சரிக்கை’ விடுக்கப்பட்டிருந்தது. மேலும், ரத்னகிரி மற்றும் சதாரா ஆகிய மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு எச்சரிக்கை’ விடுக்கப்பட்டு, தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆங்காங்கே மிகக் கடுமையான மழை பெய்ய வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் மிகவும் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்று பிருஹன்மும்பை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
https://twitter.com/PTI_News/status/2073623957434175991/video/1
பொதுமக்கள் போக்குவரத்தைப் பொறுத்தவரை, தொடர் மழையையும் மீறி மும்பையின் பிரதான பொதுப் போக்குவரத்து சேவைகளான மெட்ரோ ரயில்கள் மற்றும் ‘பெஸ்ட்’ பேருந்துகள் இன்று காலையில் வழக்கம் போல் இயங்கின. இருப்பினும், நகரின் முக்கிய வாழ்வாதாரமாக விளங்கும் புறநகர் உள்ளூர் ரயில் சேவைகள் ஆங்காங்கே தேங்கிய மழைநீர் மற்றும் சிக்னல் கோளாறுகள் காரணமாகச் சற்று தாமதத்துடன் இயங்குவதாகப் பயணிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதனால் ஞாயிற்றுக்கிழமையான இன்றும் வேலை நிமித்தமாக வெளியே சென்ற மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாக நேரிட்டது.
கடந்த 24 மணி நேர மழையளவைப் பார்க்கும்போது, மும்பையின் பல பகுதிகளில் 200 மில்லி மீட்டருக்கும் அதிகமாகவும், சில குறிப்பிட்ட இடங்களில் 300 மில்லி மீட்டரைக் கடந்தும் வரலாறு காணாத மழை பதிவாகியுள்ளது. இதில் விக்ரோலி மேற்கு பகுதியில் அதிகபட்சமாக 310.6 மி.மீ மழையும், கொலாபா நீரேற்று நிலையத்தில் 306.6 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. இதுதவிர அந்தேரி, மலபார் ஹில், போவாய், கோரேகான் உள்ளிட்ட நகரின் பெரும்பாலான முக்கியப் பகுதிகளும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன. தற்போதைய சூழலில் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு, நகரின் நீர்நிலைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
தமிழக அரசியல் களம் தற்போது இடைத்தேர்தல் மோடிற்குள் நுழைந்துள்ள நிலையில், கோட்டை வட்டாரங்களில் அமைச்சரவை மாற்றம் குறித்த விவாதங்கள் அனல்…
தமிழக பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை கண்டிராத அளவிற்கான ஒரு முக்கிய மைல்கல்லாக, முற்றிலும் நேர்மையான மற்றும் வெளிப்படையான முறையில் 215…
அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள 6 முன்னாள் எம்.எல்.ஏ-க்களின் சொத்து விவரங்கள் தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக…
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்', தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களைத்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் களம் பரபரப்பாக நகர்ந்து வரும் வேளையில், அதிமுகவில் உட்கட்சி ஒழுங்கு நடவடிக்கை…
தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக ஜூலை 10ஆம் தேதி கரூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். கடந்த…