Categories: CINEMA

‘வாய்தா’ பட நடிகையின் தற்கொலைக்கு காரணம் காதல் தோல்வியா…… டைரியில் சிக்கிய தகவல்கள்….. அதிர்ச்சியில் ரசிகர்கள்…..

சென்னை விருகம்பாக்கத்தில் தனது அப்பார்ட்மெண்டில் ‘வாய்தா’ பட நடிகையான நடிகை தீபா என்கிற ஜெசிக்கா பவுலின் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்பொழுது அவர் தனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ள எஸ் எம் எஸ் செய்தியும் தனது டைரியில் காதலன் குறித்தும் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் ,வீடியோக்கள் வெளியிட்டு சினிமாவுக்குள் நுழைபவர்கள் ஏராளம். அப்படி வெள்ளி திரையில் நுழைந்தவர் தான் நடிகை தீபா என்கிற ஜெசிக்கா பவுலின். இவர் வாய்தா படத்தின் மூலம் ஹீரோயினாக திரையுலகில் அறிமுகமானார். இதை தொடர்ந்து துப்பறிவாளன் படத்தில் விஷால் உடன்  இணைந்து நடித்துள்ளார். ஜெசிகா ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்.

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது அப்பார்ட்மெண்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார். தற்பொழுது நேற்று முன்தினம் மாலை அவரது நண்பரான பிரபாகரன் தீபாவை பார்க்க வீட்டிற்கு சென்றுள்ளார்.வீட்டின் கதவு உட்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. பலமுறை கதவைத் தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. எனவே சந்தேகம் அடைந்த பிரபாகரன் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.

விரைந்து வந்த கோயம்பேடு போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்பொழுது துப்பட்டாவால் மின்விசிறியில் நடிகை தீபா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதைப் பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். உடலை மீட்ட போலீசார் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது .பின்னர் அவரது சகோதரர் ரமேஷ் புகார் கொடுத்ததை  அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தீபாவின் வீட்டை சோதனையிட்டபோது அதில் அவர் தனது நண்பர்களுக்கு ‘இந்த உலகத்தில் எனக்கு வாழ பிடிக்கவில்லை. எனக்காக யாரும் இல்லை. எனவே நான் தற்கொலை செய்யப் போகிறேன்’ என்று எஸ்எம்எஸ் அனுப்பியுள்ளார். மேலும் அவரது டைரியில் ‘தான் ஒருவரை ஒரு வருடமாக காதலிப்பதாகவும், அவர் தனது காதலை ஏற்க மறுத்ததால் தற்கொலை முடிவு எடுத்ததாகவும்’ குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இவரது காதலன் யார்? இவர் உண்மையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது இது கொலையா? என்று விசாரித்து வருகின்றனர்.

Begam

Recent Posts

இந்த புகைப்படத்தில் விஜய்க்கும், பிரபுவுக்குமிடையில் இருக்கும் இந்த பிரபல நடிகர் யாருன்னு தெரியுதா…?

பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான கயல் தேவராஜ் நடிகர் விஜய் மற்றும் நடிகர் பிரபு உடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் ஒன்று…

16 mins ago

ஷார்ட்ஸ் உடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்து.. இளசுகளை கவரும் அஞ்சு குரியன்.. வைரல் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவில் நடிகையாகவும் மாடல் அழகியாகவும் வலம் வருபவர் அஞ்சு குரியன். இவர் 2013 ஆம் ஆண்டு இயக்குனர் அல்போன்ஸ்…

18 mins ago

சீரியல் நடிகை காயத்ரி வீட்டில் நடந்த மற்றுமொரு விசேஷம்… ஒன்று கூடிய மொத்த குடும்பம்…வெளியான புகைப்படங்கள் &வீடியோ…

சின்னத்திரை சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சீரியல் நடிகை காயத்ரி. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஹிட் சீரியல்களில்…

48 mins ago

பாலச்சந்தருக்கு பயந்து இரண்டு பொய்களை சொன்ன ரஜினிகாந்த்.. உயிருக்கே ஆபத்தாக வந்த சம்பவங்கள்!

கே பாலச்சந்தர் தமிழ் சினிமாவில் 1975 ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள் திரைப்படம் மூலமாக ரஜினிகாந்தை அறிமுகப்படுத்தினார். அதன் பிறகும்…

53 mins ago

கொஞ்சமாவது அறிவு இருக்கா..? 10-ம் வகுப்பு படிக்கிற பொண்ண இப்படியா நடத்துவீங்க.. கொந்தளித்த விஜே அர்ச்சனா..!

உத்திரபிரதேசம் மாநிலம் சீதாப்பூரை சேர்ந்த மாணவி கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான 10-ம் வகுப்பு முடிவுகளில் 591 மதிப்பெண்கள்…

58 mins ago

30000 அடி உயரத்தில் சுக்கு நூறாக வெடித்த விமானம்! அத்தனை அடி தூரத்தில் இருந்தும் கீழே விழுந்து உயிர் பிழைத்த இளம்பெண்! நம்பவே முடியலையே…

அடுத்த நொடியில் என்னென்ன ஆச்சரியங்களை ஒளித்துவைத்திருக்கிறதோ இந்த வாழ்க்கை! நமது வாழ்க்கையில் என்ன வேண்டுமானாலும் அதிசயம் நடக்கலாம் என்பதற்கு உதாரணமாக…

1 hour ago