‘வாய்தா’ பட நடிகையின் தற்கொலைக்கு காரணம் காதல் தோல்வியா…… டைரியில் சிக்கிய தகவல்கள்….. அதிர்ச்சியில் ரசிகர்கள்…..

By Begam

Published on:

சென்னை விருகம்பாக்கத்தில் தனது அப்பார்ட்மெண்டில் ‘வாய்தா’ பட நடிகையான நடிகை தீபா என்கிற ஜெசிக்கா பவுலின் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்பொழுது அவர் தனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ள எஸ் எம் எஸ் செய்தியும் தனது டைரியில் காதலன் குறித்தும் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் ,வீடியோக்கள் வெளியிட்டு சினிமாவுக்குள் நுழைபவர்கள் ஏராளம். அப்படி வெள்ளி திரையில் நுழைந்தவர் தான் நடிகை தீபா என்கிற ஜெசிக்கா பவுலின். இவர் வாய்தா படத்தின் மூலம் ஹீரோயினாக திரையுலகில் அறிமுகமானார். இதை தொடர்ந்து துப்பறிவாளன் படத்தில் விஷால் உடன்  இணைந்து நடித்துள்ளார். ஜெசிகா ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்.

   

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது அப்பார்ட்மெண்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார். தற்பொழுது நேற்று முன்தினம் மாலை அவரது நண்பரான பிரபாகரன் தீபாவை பார்க்க வீட்டிற்கு சென்றுள்ளார்.வீட்டின் கதவு உட்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. பலமுறை கதவைத் தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. எனவே சந்தேகம் அடைந்த பிரபாகரன் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.

விரைந்து வந்த கோயம்பேடு போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்பொழுது துப்பட்டாவால் மின்விசிறியில் நடிகை தீபா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதைப் பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். உடலை மீட்ட போலீசார் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது .பின்னர் அவரது சகோதரர் ரமேஷ் புகார் கொடுத்ததை  அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தீபாவின் வீட்டை சோதனையிட்டபோது அதில் அவர் தனது நண்பர்களுக்கு ‘இந்த உலகத்தில் எனக்கு வாழ பிடிக்கவில்லை. எனக்காக யாரும் இல்லை. எனவே நான் தற்கொலை செய்யப் போகிறேன்’ என்று எஸ்எம்எஸ் அனுப்பியுள்ளார். மேலும் அவரது டைரியில் ‘தான் ஒருவரை ஒரு வருடமாக காதலிப்பதாகவும், அவர் தனது காதலை ஏற்க மறுத்ததால் தற்கொலை முடிவு எடுத்ததாகவும்’ குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இவரது காதலன் யார்? இவர் உண்மையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது இது கொலையா? என்று விசாரித்து வருகின்றனர்.

author avatar