கழிவறையில் கிடந்த பச்சிளம் குழந்தை!.. உயிரை காப்பாற்ற அழுதுகொண்டே மருத்துவமனைக்கு அலறியடித்து ஓடிய போலீசார்.. சென்னையை உலுக்கிய சம்பவம்..!!

Spread the love

சென்னை ஓஎம்ஆர் (OMR) சாலை, சோழிங்கநல்லூர் ஆவின் பால் பண்ணை எதிரே உள்ள சென்னை மாநகராட்சி பொதுக் கழிவறையில், பிறந்து 10 நிமிடமே ஆன பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று தொப்புள் கொடியுடன் வீசப்பட்டுக் கிடந்தது. அப்போது அங்கு இரவுப் பணியில் ஈடுபட்டிருந்த பர்வீனா (65) என்ற தூய்மைப் பணியாளர், குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்து, உடன் பணிபுரியும் ஜீவா, காமாட்சி ஆகியோரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் அவர்கள் தங்களது மேற்பார்வையாளர் மூலம் செம்மஞ்சேரி காவல் நிலையத்திற்கு உடனடியாகத் தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்த செம்மஞ்சேரி காவல் ஆய்வாளர் ராஜசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தூய்மைப் பணியாளர்கள் உதவியுடன் உயிருக்கு விளிம்பில் போராடிக்கொண்டிருந்த குழந்தையை மீட்டனர். பின்னர், ‘பிங்க் பெட்ரோல்’ (Pink Patrol) வாகனத்தில் சைரன் ஒலித்தபடி அதிவேகமாகச் சென்று, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்து முதலுதவி அளித்துக் காப்பாற்றினர். பச்சிளம் குழந்தையைக் எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற பதற்றத்துடன் போலீசார் மருத்துவமனைக்குத் தூக்கிக் கொண்டு ஓடிய நெகிழ்ச்சியான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி, பொதுமக்களின் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது.

அதனைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு, வென்டிலேட்டர் வசதி கொண்ட 108 குழந்தைகள் ஆம்புலன்ஸ் மூலம் போலீசார் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். உயிருக்கு போராடிய பச்சிளம் குழந்தையைத் தங்கள் சொந்தக் குழந்தையைப் போலக் கருதி போலீசார் அரவணைத்துக் காப்பாற்றிய இச்சம்பவம் மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள செம்மஞ்சேரி போலீசார், பச்சிளம் குழந்தையைக் கழிவறையில் வீசிச் சென்ற கொடூரத் தாய் யார், அதற்கான காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Muthu Mani

Recent Posts

போடு ரகிட ரகிட..! இனி சொந்த மாவட்டத்திலேயே வேலை கிடைக்க அரசு புதிய திட்டம்… வெளியான சூப்பர் குட் நியூஸ்..!!

தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள முஹமது பர்வேஸ், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…

9 minutes ago

என்னை துருப்பு சீட்டாக பயன்படுத்தி திமுகவை உடைக்க சதி… தவெக அமைச்சரவையில் இணைந்ததே இதற்காக தான்… உண்மையை போட்டுடைத்த திருமாவளவன்..!!

தமிழகத்தில் நிலவிய அரசியல் நெருக்கடி காரணமாகவே தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) இணைந்ததே…

18 minutes ago

இன்ஜினியரிங், டாக்டருக்கு ஒரே தேர்வு..? நீட் குளறுபடிக்கு நடுவே மத்திய அரசின் அடுத்த மாஸ்டர் பிளான்…!!

பொறியியல் (Engineering) மற்றும் மருத்துவப் (Medical) படிப்புகளுக்கு தனித்தனியாக தேர்வுகள் நடத்துவதற்குப் பதிலாக, ஒருங்கிணைந்த ஒரே பொது நுழைவுத் தேர்வை…

23 minutes ago

“காங்கிரஸை நம்பாதீங்க.. கிட்டயே சேர்க்காதீங்க” மோடி+அமித்ஷா தான் காரணம்னு நினைச்சேன் ஆனால்… டுவிஸ்ட் வைத்த உதயநிதி..!!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் மே 23 அன்று திமுக இளைஞரணி அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உரையாற்றிய…

25 minutes ago

உதயநிதிக்கு தெரிந்தே கைமாறிய பணம்… கட்சியை வியாபார சந்தையாக்கிவிட்டார்… நான் கட்சியை விட்டு விலகிய காரணமே இதுதான்.. தஞ்சை பார்த்திபன் பகீர்..!!

திமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த தஞ்சை பார்த்திபன், திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினை…

28 minutes ago

BREAKING: இரவோடு இரவாக திமுகவிலிருந்து விலகிய முக்கிய புள்ளி.. செம அதிர்ச்சியில் ஸ்டாலின்..!!

திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் மாநில துணைச் செயலாளரான மீனா ஜெயக்குமார், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப்…

32 minutes ago