Connect with us

CINEMA

நன்றி மறந்தாரா தம்பி..? அண்ணன் விஜயகாந்தை நேரில் சென்று பார்க்காதது ஏன்..?

நடிகர் விஜய் தற்போது ஒரு படத்தில் நடிக்க கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார். அதேபோல் இவரின் படங்களும் கோடி கணக்கில் வசூல் செய்து வருகிறார். ஆனால் விஜய் இந்த இடத்தை அவ்வளவு எளிதாக அடையவில்லை. ஆரம்ப காலத்தில் பல விமர்சனங்கள் தோல்விகள் ஆகியவற்றை சந்தித்தார். அந்த சமயத்தில் விஜய்க்கு கை கொடுத்து உதவி செய்தவர் தான் கேப்டன் விஜயகாந்த். அதாவது விஜய் அவரது கெரியரை தொடங்கிய சமயத்தில் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் டாப்பில் இருந்தார்.

   

எனவே விஜய் படத்தில் விஜயகாந்த் நடித்தால் விஜய்க்கு நல்ல அறிமுகம் இருக்கும் என விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் நினைத்தார். அதனால் அவர் கேட்ட உடனேயே தம்பிக்காக இதை கூட செய்ய மாட்டேனா என கூறி விஜயகாந்த் சம்மதம் தெரிவித்து நடித்து கொடுத்த படம் தான் செந்தூரப்பாண்டி. அந்த படம் வெற்றி பெற்றதோடு விஜய்க்கும் நல்ல ஆரம்பமாக இருந்தது. அதன் பின்னரே அவருக்கு அடுத்தடுத்து படங்கள் வந்தது.

தற்போது விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த சில ஆண்டுகளாகவே விஜயகாந்த் உடல்நலம் குன்றி தான் காணப்படுகிறார். ஆனால் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கூட விஜய் அவரை நேரில் சந்திக்கவில்லை.

நேரில் கூட வேண்டாம் குறைந்தது தொலைபேசி வாயிலாக கூட விஜயகாந்த் உடல்நலம் குறித்து விஜய் விசாரிக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது. என்னதான் விஜய் அவரது திறமையால் முன்னுக்கு வந்திருந்தாலும் அன்று விஜயகாந்த் செய்த அந்த உதவியும் விஜய்யின் வளர்ச்சிக்கு ஒரு காரணம் என்பது தான் உண்மை. எனவே விஜய் நன்றி மறந்து விட்டதாக கூறி பலரும் அவரை விமர்சித்து வருகிறார்கள்.

author avatar
Archana
Continue Reading

More in CINEMA

To Top