CINEMA
தங்கலான் படத்தில் விக்ரம் ரசிகர்களுக்கு ஏமாற்றம்.. ஒரு மணி நேரம் தானா..? இவ்வளோ கஷ்டப்பட்டது வீணா போயிடுமோ..?
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் இயக்குனர் பா.ரஞ்சித். ஒவ்வொரு படத்திலும் சமூகத்திற்கு வித்தியாசமான மெசேஜ் கொடுக்க வேண்டும் என நினைப்பவர் பா.ரஞ்சித். தற்போது பா.ரஞ்சித் இயக்கம் தங்கலான் படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ளார்.nஇந்த படத்தின் டீசரில் விக்ரமின் வித்தியாசமான தோற்றத்தை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போனார்கள்.
1800 காலகட்டங்களில் கோலார் தங்க வயல் நடைபெற்ற வரலாற்று சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஆக்ஷன் திரைப்படமாக இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் சீயான் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தங்கலான் படத்தில் விக்ரமுக்கு அவ்வளவாக வசனங்களை இல்லை என இணையத்தில் தகவல் வெளியாகி உள்ளது. பிரம்மாண்டமாக 3டி தொழில்நுட்பத்தில் தயாராகும் தங்கலான் திரைப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக 2024-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
இந்த படத்தின் இறுதி கட்டப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தங்கலான் படத்தில் தனது வசனங்களை விக்ரம் ஒரு மணி நேரத்தில் டப்பிங் பேசி முடித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு மணி நேரத்தில் டப்பிங் பணிகளை முடித்து விட்டதால் வசனங்கள் மிகவும் குறைவாக இருக்குமோ என விக்ரமின் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.