விஜய்க்கு விழுந்த பலத்த அடி… ஸ்டாலினுக்கு ‘டாட்டா’ காட்டிய பி.டி. செல்வகுமார்… அதிமுக வேட்பாளருக்காக களமிறங்கியது ஏன்..?

Spread the love

தமிழகத் திரையுலகில் நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளராகவும், ‘புலி’ படத்தின் தயாரிப்பாளராகவும் அறியப்படுபவர் பி.டி. செல்வகுமார். விஜய்யுடன் ‘கோயமுத்தூர் மாப்பிள்ளை’ படத்தில் நடித்ததுடன், ‘சுறா’, ‘வில்லு’, ‘போக்கிரி’ போன்ற பல படங்களுக்கு மக்கள் தொடர்பு அதிகாரியாகவும் (PRO) பணியாற்றியுள்ளார். விஜய்யிடமிருந்து பிரிந்த பிறகு ‘கலப்பை மக்கள் இயக்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கி சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்த அவர், கடந்த சில காலங்களாகவே தனது அரசியல் பாதையைத் தீர்மானிப்பதில் தீவிரமாக இருந்து வந்தார்.

கடந்த டிசம்பர் மாதம் எதிர்பாராத திருப்பமாக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த பி.டி. செல்வகுமாருக்கு, அக்கட்சியின் மாநில வர்த்தகர் அணியில் துணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. நடந்து வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என அவர் பெரிதும் எதிர்பார்த்தார். ஆனால், அவருக்கு சீட் வழங்கப்படாததால் அதிருப்தி அடைந்த அவர், திமுகவில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்தார். தனது பழைய இயக்கமான கலப்பை மக்கள் இயக்கத்தை மீண்டும் கையில் எடுத்த அவர், தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வைத் திட்டமிட்டார்.

திமுகவில் இருந்து வெளியேறிய கையோடு, கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் என். தளவாய் சுந்தரத்திற்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்த பி.டி. செல்வகுமார், கடந்த ஒரு வாரமாக தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை நேரில் சந்தித்து தனது ஆதரவை உறுதிப்படுத்தினார். இந்தச் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பின் போது, அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரத்தின் வெற்றிக்காகத் தனது கலப்பை மக்கள் இயக்கம் அர்ப்பணிப்புடன் களப்பணியாற்றும் என்று பி.டி. செல்வகுமார் உறுதியளித்தார். மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தின் பிற தொகுதிகளிலும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யத் தீவிரமாகப் பணியாற்றப் போவதாக அவர் தெரிவித்துள்ளார். விஜய்யின் நிழலாக இருந்த ஒருவர், தற்போது அதிமுகவின் வெற்றிக்காகக் களம் இறங்கியிருப்பது தேர்தல் களத்தில் கூடுதல் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

பரிட்சை எழுத வந்த இடத்தில் இப்படியா..? கால்வாயின் மேல்தளம் உடைந்து.. 25 மாணவர்கள் உள்ளே விழுந்த சோகம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெற்ற பி.எட். நுழைவுத் தேர்வு மையத்திற்கு வெளியே, சாக்கடைக் கால்வாயின் கான்கிரீட் மூடி உடைந்ததில்…

2 minutes ago

“அப்பா என் புருஷன் வீட்டில் பிரச்னை வந்தா” மகள் கேட்ட அந்த ஒரு கேள்வி… சொல்வதறியமால் கண்ணீர் விட்ட பெற்றோர்கள்…!!

தற்போது சமூக ஊடகங்களில் ஒரு குடும்பத்தினர் இரவு உணவு சாப்பிடும் போது எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்று மிகவும் வைரலாகி வருகிறது.…

11 minutes ago

அதிமுக தொண்டர் தற்கொலை.. “பிளீஸ் இனி யாரும் இப்படி செய்யாதீங்க” நா தழுதழுக்க பேசிய எடப்பாடி பழனிச்சாமி…!!

"அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்" என்ற கோரிக்கையை முன்வைத்து, தற்கொலை செய்துகொண்ட அக்காட்சி நிர்வாகி மகேந்திரனின் உடலுக்கு அதிமுக பொதுச்செயலாளர்…

18 minutes ago

விதிமுறைகளை மீறி ‘ரீல்ஸ்’ போடும் தவெக MLA-க்கள்… அரசு அதிகாரிகளுடன் வெடித்த மோதல்… TVK அரசுக்கு புதிய சிக்கல்..!!

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதிகளில் மேற்கொள்ளும் கள ஆய்வு நிகழ்வுகளை, சமூக ஊடகங்களில்…

23 minutes ago

“தடம் தெரியாமல் தரைமட்டமாக்குவோம்” – ஹெஸ்புல்லாவை முற்றிலுமாக அழிக்க இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அதிரடி உத்தரவு..!!

லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா அமைப்பினரின் இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்தி வரும் ராணுவ நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த, இஸ்ரேல் பிரதமர்…

36 minutes ago

பழிக்குப்பழி..! அமெரிக்காவை அலறவிட்ட ஈரான் ராணுவம்.. அமெரிக்க தளத்தை குறிவைத்து ஏவப்பட்ட ஏவுகணைகளால் பரபரப்பு..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் நிறுத்த நீட்டிப்பு மற்றும் அமைதி உடன்பாட்டை எட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட அமைதி பேச்சுவார்த்தையில்…

41 minutes ago