#image_title
மறைந்தாலும் மக்கள் மனதை விட்டு நீங்காத வள்ளலாக பார்க்கப்படுபவர் புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த். விக்ரமன் இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வானத்தை போல.
விஜயகாந்த் நடித்த இந்த படத்தில் பிரபு தேவா, லிவிங்ஸ்டன், கௌசல்யா, ரமேஷ் கண்ணா, செந்தில், ஆனந்தராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி படமாக அமைந்தது.
அதோடு வானத்தைப்போல படத்திற்கு சிறந்த படம் என விருதும் கிடைத்தது. இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த ஒரு சம்பவம் பற்றி நரேன் அவர்கள் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
#image_title
அதாவது இரவு 12 மணி அளவில் படப்பிடிப்பு முடிந்துள்ளது. அதன் பிறகு அடுத்த படப்பிடிப்பு அதிகாலை சூரிய உதயத்தின் போது எடுக்க வேண்டுமாம். இதனால் விஜயகாந்த்திடம் ரூமுக்கு சென்று விட்டு அதிகாலையில் வருமாறு கூறியுள்ளார்.
பின்னர் அனைவரும் புறப்பட்டு சென்று விட்டனர். அதிகாலையில் படப்பிடிப்பிற்கு வரும் வழியில் வண்டி ஒன்று நடுவழியில் சிக்கி உள்ளது. அதனை அப்புறப்படுத்தி வருவதற்குள் விடிந்துவிட்டது.
ஆனால் படபிடிப்பு எடுக்க வேண்டிய இடத்தில் விஜயகாந்த் அமர்ந்திருக்கிறார். அவரிடம் சென்று எப்போது வந்தீர்கள் என்று கேட்டபோது ரூமுக்கு சென்று சும்மா தானே இருக்க வேண்டும்.
அதனால் தான் டிரைவரிடம் கேட்டு படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கே வந்து விட்டேன் என கூறியுள்ளார். அதோடு நமக்காக ஷாட் காத்திருக்கக் கூடாது நாம் தான் ஷாட்டுக்காக காத்திருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…