Categories: சினிமா

“நான் பழைய ஆளு, நீ இன்னைக்கு என்ன விட பெரிய நடிகர்… – வாழ்க்கையில இத மட்டும் கத்துக்கோ” – நாகேஷ் சொன்ன வாழ்க்கைத் தத்துவம்!

Spread the love

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களுக்கு ஒன்றே ஒரு தொடர்ச்சியான பாரம்பரியம் உண்டு. ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் ஒரு நடிகர் கோலோச்சுவார். அவருக்கு பின் ஒருவர் வர முன்னணில் இருந்தவரின் மார்க்கெட் காலியாகும். அப்படி சந்திரபாபுவுக்கு அடுத்து முன்னணி நகைச்சுவை நடிகராக வந்தவர் நாகேஷ்.

தமிழ் சினிமாவில் தன்னுடைய வித்தியாசமான உடல்மொழி மற்றும் நகைச்சுவை தெறிக்கும் வசனங்கள் மூலமாகக் கலக்கியவர் நாகேஷ். 20 ஆண்டுகளுக்கு மேலாக இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். அவரை தமிழ் சினிமாவின் சார்லி சாப்ளின் என்றும் சொல்வர். கவுண்டமணி வருகைக்குப் பிறகும் பல படங்களில் நகைச்சுவை, வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.

ஆனால் 2000களுக்குப் பிறகு அவருக்கு பெரிய வாய்ப்புகள் அமையவில்லை. கடைசியாக அவர் நடித்த குறிப்பிடத்தக்க படம் என்றால் அது இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி மற்றும் தசாவதாரம் ஆகிய படங்கள்தான். இந்நிலையில் நாகேஷோடு நெருக்கமாகப் பழகிய நடிகர் இளவரசு அவர் தனக்கு சொன்ன ஒரு முக்கியமான வாழ்க்கைத் தத்துவத்தைப் பற்றி சாய் வித் சித்ரா நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

அதில் “நான் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தின் ஆடியோ வெளியீட்டில் நாகேஷ் சாரோடு பேசிக் கொண்டிருந்தேன். அப்போது நான் படித்த “எதிர்காலத்துக்கான சிறந்த சேமிப்பு.. கடந்த காலத்தின் நினைவுகள்தான்’ என்ற மேற்கோளை அவரிடம் சொல்லி இது சரியா சார்’ என்றேன்.

அவர் என்னிடம் “டேய் நான் இன்னைக்கு பழைய நாகேஷ், எனக்கு வேலை இல்லை. நீ என்னை விட இன்று பெரிய நடிகர். நான் திருவிளையாடல் தருமியையோ அல்லது தில்லானா மோகனாம்பாள் வைத்தியையோ இன்றைக்கும் நினைத்துக் கொண்டிருந்தால் நான் உன்னை மதித்துப் பேசக் கூட மாட்டேன். அதனால் எல்லாத்தையும் மறக்கக் கத்துக்கோ” என தடாலடியாக பேசினார். எனக்கு அது மிகப்பெரிய கண்திறப்பாக இருந்தது.” என அந்த நேர்காணலில் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

மத்திய கிழக்கு போர் எதிரொலி.. “பெட்ரோலுக்கு மட்டும் இல்லை இனி சாப்பாடுக்கும் தட்டுப்பாடு”… ஸ்தம்பிக்கப் போகும் விவசாயம்… உலக வங்கி நிபுணர் இந்தர்மிட் கில்லின் எச்சரிக்கை…!!!!

மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றங்கள் உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக உலக வங்கியின் தலைமை…

2 minutes ago

“பிள்ளையைக் கிள்ளி விட்டு.. தொட்டிலை ஆட்டும் ட்ரம்ப்”…. அமெரிக்காவிற்கு ஈரான் கொடுத்த ‘செங்கடல்’ எச்சரிக்கை… அடுத்த சில நாட்களில் நடக்கப்போவது இதுதான்…!

மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் போக்கு உலகளாவிய பொருளாதாரத்திற்கு…

3 minutes ago

வார்த்தை கூறி 180 சிறுமிகளை சீரழித்த காம கொடூரன்… 350 ஆபாச வீடியோக்கள்… ‘ஸ்னாப்சாட்’ சைக்கோ சிக்கியது எப்படி?… மகாராஷ்டிராவை உலுக்கிய கொடூர சம்பவம்…!!

மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டம் பரத்வாடா நகரைச் சேர்ந்த முகமது அயாஸ் என்ற வாலிபர், வாட்ஸ் அப் மற்றும் ஸ்னாப்சாட்…

8 minutes ago

“30,000 கோடி ஆடியோ விவகாரம்”… ஸ்டாலினுக்கு குஷ்பு விடுத்த பகிரங்க சவால்… திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி…!

தமிழக அரசியல் களத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் இயக்குநர் சுந்தர் சி இடையேயான மோதல், தற்போது கொள்கை…

15 minutes ago

சீனா கொடுத்த ‘பிக்பாட்’ ட்விஸ்ட்!… ஜி ஜின்பிங் சொன்ன ‘அந்த ஒரு வார்த்தை’… ஈரானுக்கு டிரம்ப் வைத்த செக்… அதிர்ந்து போன உலக நாடுகள்…!!

பிப்ரவரி 28 முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஒருங்கிணைந்து நடத்தி வரும் தீவிரத் தாக்குதல்களில், ஈரானின்…

20 minutes ago

மூச்சுத் திணறும் உலகப் பொருளாதாரம்… வெறும் 21 மைல் கடற்பரப்பால் அழியப்போகும் வல்லரசு நாடுகளின் கனவு!… இந்தியாவை நிலைகுலையச் செய்யும் அமெரிக்காவின் இந்த ஒரு முடிவு…!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றத்தால் உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) முடக்கப்பட்டுள்ளது.…

23 minutes ago