Categories: சினிமா

“நான் பழைய ஆளு, நீ இன்னைக்கு என்ன விட பெரிய நடிகர்… – வாழ்க்கையில இத மட்டும் கத்துக்கோ” – நாகேஷ் சொன்ன வாழ்க்கைத் தத்துவம்!

Spread the love

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களுக்கு ஒன்றே ஒரு தொடர்ச்சியான பாரம்பரியம் உண்டு. ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் ஒரு நடிகர் கோலோச்சுவார். அவருக்கு பின் ஒருவர் வர முன்னணில் இருந்தவரின் மார்க்கெட் காலியாகும். அப்படி சந்திரபாபுவுக்கு அடுத்து முன்னணி நகைச்சுவை நடிகராக வந்தவர் நாகேஷ்.

தமிழ் சினிமாவில் தன்னுடைய வித்தியாசமான உடல்மொழி மற்றும் நகைச்சுவை தெறிக்கும் வசனங்கள் மூலமாகக் கலக்கியவர் நாகேஷ். 20 ஆண்டுகளுக்கு மேலாக இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். அவரை தமிழ் சினிமாவின் சார்லி சாப்ளின் என்றும் சொல்வர். கவுண்டமணி வருகைக்குப் பிறகும் பல படங்களில் நகைச்சுவை, வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.

ஆனால் 2000களுக்குப் பிறகு அவருக்கு பெரிய வாய்ப்புகள் அமையவில்லை. கடைசியாக அவர் நடித்த குறிப்பிடத்தக்க படம் என்றால் அது இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி மற்றும் தசாவதாரம் ஆகிய படங்கள்தான். இந்நிலையில் நாகேஷோடு நெருக்கமாகப் பழகிய நடிகர் இளவரசு அவர் தனக்கு சொன்ன ஒரு முக்கியமான வாழ்க்கைத் தத்துவத்தைப் பற்றி சாய் வித் சித்ரா நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

அதில் “நான் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தின் ஆடியோ வெளியீட்டில் நாகேஷ் சாரோடு பேசிக் கொண்டிருந்தேன். அப்போது நான் படித்த “எதிர்காலத்துக்கான சிறந்த சேமிப்பு.. கடந்த காலத்தின் நினைவுகள்தான்’ என்ற மேற்கோளை அவரிடம் சொல்லி இது சரியா சார்’ என்றேன்.

அவர் என்னிடம் “டேய் நான் இன்னைக்கு பழைய நாகேஷ், எனக்கு வேலை இல்லை. நீ என்னை விட இன்று பெரிய நடிகர். நான் திருவிளையாடல் தருமியையோ அல்லது தில்லானா மோகனாம்பாள் வைத்தியையோ இன்றைக்கும் நினைத்துக் கொண்டிருந்தால் நான் உன்னை மதித்துப் பேசக் கூட மாட்டேன். அதனால் எல்லாத்தையும் மறக்கக் கத்துக்கோ” என தடாலடியாக பேசினார். எனக்கு அது மிகப்பெரிய கண்திறப்பாக இருந்தது.” என அந்த நேர்காணலில் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

இரத்தக் களரியான இலங்கை சிறைச்சாலை… தடுத்த போலீசாருக்கு நேர்ந்த கொடூரம்… போர்க்களமாக மாறிய நீர்கொழும்பு ஜெயில்…!

இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…

3 மணத்தியாலங்கள் ago

அயோத்தி ராமர் கோயில் விவகாரம்… டெலிட் செய்யப்பட்ட வீடியோவில் சிக்கிய ஆதாரம்… அம்பலமான அதிர்ச்சி உண்மை…!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…

3 மணத்தியாலங்கள் ago

திடீரென அணைந்த விளக்குகள்… காட்டுமன்னார்கோவில் அரசு மாளிகையில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி… காரில் தவித்த சௌமியா அன்புமணி… என்ன நடந்தது…?

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…

3 மணத்தியாலங்கள் ago

பயங்கர வெள்ளத்தில் சிக்கிய சொகுசு கார்கள், புல்டோசர்கள்… காஷ்மீரில் விடிய விடிய நடந்த கோரத்தாண்டவம்… நடுங்க வைக்கும் வீடியோ…!

ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…

4 மணத்தியாலங்கள் ago

இன்ஸ்டா கள்ளக்காதல் விபரீதம்… ஆண் நண்பர்களுக்கு நிர்வாண… வீடியோ அனுப்பிய மனைவி… காட்டுக்குள் வீசிவிட்டு தப்பிய கணவர் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…

4 மணத்தியாலங்கள் ago