Categories: CINEMA

‘பொற்காலம்’ விமர்சனத்தில் நான் சொன்ன அந்த ஒரு வார்த்தை… சேரன் ஆஃபிஸுக்கு வந்து பொங்கிட்டாரு- ஜேம்ஸ் வசந்தன் பகிர்ந்த தகவல்!

சிலரை அறிமுகப்படுத்தும் போது அவரை என்ன சொல்லி அறிமுகப்படுத்துவது என்ற குழப்பம் வரும். அந்த அளவுக்கு பல துறைகளில் தங்கள் திறமையைக் காட்டிலும் அனைத்திலும் சாதித்திருப்பார்கள். அப்படிப்பட்ட ஒருவர்தான் ஜேம்ஸ் வசந்தன். மெல்லிசைக் குழு நடத்துனராக, இசைப் பயிற்சியாளராக, தமிழ் ஆர்வலராக, நிகழ்த்தித் தொகுப்பாளராக, இசையமைப்பாளராக, பாடல் ஆசிரியாக, இயக்குனராக பல முகங்கள் கொண்டவர் ஜேம்ஸ் வசந்தன்.

இசையமைப்பாளர் ஆகவேண்டும் என்ற கனவோடு சென்னை வந்த ஜேம்ஸ் வசந்தன் முதலில் இசை நிகழ்ச்சி தொகுப்பாளராக சன் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். அதன் பின்னர் சன் தொலைக்காட்சியில் டாப் 10 மூவிஸ் என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். அப்போது தான் சந்தித்த பல சுவாரஸ்யமான நிகழ்வுகளை சமீபத்தில் ஒரு நேர்காணலில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

#image_title

அதில் “நாங்கள் எல்லா படத்துக்கும் விமர்சனம் செய்யும் போது இறுதியில் படத்தைப் பற்றி ஒரு வரியில் பன்ச் ஒன்று சொல்வோம். அது ரசிகர்களுக்கு பிடித்துப் போனதால் நான் என்ன சொல்லப் போகிறேன் என்று எதிர்பார்க்க ஆரம்பித்தார்கள். அப்படி எனக்குப் பிடிக்காமல் நான் சேரனின் பொற்காலம் படத்துக்கு ஒரு வார்த்தையை சொல்லும்படி ஆகிவிட்டது.

அந்த படம் எனக்குப் பிடித்திருந்தது. ஆனாலும் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் படம் பற்றி பேசி முடிக்கும் போது ‘பொற்காலம் – கற்காலம்’ என சொல்ல சொல்லி  வற்புறுத்தினார்கள். நானும் வேறு வழியில்லாமல் சொல்லிவிட்டேன். நிகழ்ச்சி ஒளிபரப்பானதும் இயக்குனர் சேரன் அலுவலகத்துக்கே வந்து கோபமாக பேசினார்.

ஏன் ஒரு படத்தைப் பற்றி இவ்வளவு எதிர்மறையாக பேசுகிறீர்கள். படம் நன்றாக இருப்பதால் மக்கள் ரசித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஏன் நீங்கள் இப்படி கலைஞர்களை அவமதிக்கிறீர்கள். நல்ல ஆக்கபூர்வமான விமர்சனங்களை சொல்லுங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என கோபமாக பேசிவிட்டு போனார்” என்று தெரிவித்துள்ளார். அதே போல தன்னுடைய நிகழ்ச்சியின் தாக்கத்தால் சத்யராஜ் ஒரு படத்தில் தன்னை மறைமுகமாக தாக்கி பேசுவது போல ஒரு காட்சி வைத்ததாகவும் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

“எனக்கு பொறக்க போறது இந்த குழந்தை தான்”… பார்ட்டி வைச்சு வீடியோ வெளியிட்ட ‘குக் வித் கோமாளி’ இர்பான்…  ஷாக்கில் ரசிகர்கள்…

விஜய் டிவியில் தற்பொழுது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் நடுவர்களாக…

22 mins ago

MGR க்கும் அவர் அண்ணனுக்கும் ஏற்பட்ட புகைச்சல்… தன் பேச்சால் ஒன்று சேர்த்த NSK- இதனாலதான் அவர் கலைவாணர்!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக முடிசூடா மன்னனாக விளங்கியவர் எம் ஜி ஆர். நடிப்பு மட்டும் இல்லாமல்…

36 mins ago

சேலையில் குடும்ப குத்துவிளக்காக இருக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி.. லேட்டஸ்ட் புகைப்படம்..!

'புஷ்பா புருஷன்' என்கின்ற டயலாக் மூலமாக மக்களிடையே மிகவும் பிரபலமானவர் ரேஷ்மா பசுபுலேட்டி. சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன்பு ஒரு…

47 mins ago

முதல் சந்திப்பில் கண்டுகொள்ளாத சரோஜாதேவி… ஆனாலும் பெருந் தன்மையாக நடந்த MGR – மெய்சிலிர்த்துப் போன கன்னடத்துப் பைங்கிளி!

தமிழ் சினிமாவில் கொஞ்சும் தமிழ் பேசி ரசிகர்களைக் கவர்ந்தவர் சரோஜா தேவி. கர்நாடகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அவரை தமிழ் ரசிகர்கள்…

51 mins ago

இளையராஜாவின் ட்யூனைக் கேட்டு பின் வாங்கிய கவிஞர்கள்… அட இந்த பாட்டுக்குப் பின்னால் இப்படி ஒரு கதையா?

தமிழ் சினிமாவின் தனிப்பெரும் சாதனையாளர்களில் ஒருவர் இளையராஜா. உலகளவில் அவர் அளவுக்கு அதிக படங்களில் இசையமைத்த இசையமைப்பாளர் இல்லை. இப்போதும்…

1 hour ago

மீண்டும் முன்னாள் காதலன் ராபர்ட்டுடன் இணையும் வனிதா விஜயகுமார்.. ஓ இதுக்காக தானா..? வைரலாகும் போட்டோஸ்..!!

வனிதா விஜயகுமார் விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தில் என்ட்ரி கொடுத்தார் பிக் பாஸ் உள்ளிட்ட ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு…

1 hour ago