தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்பதற்கான ஆயத்தப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதன் ஒரு பகுதியாக, ஆட்சி அமைக்கத் தங்களுக்கு அழைப்பு விடுக்குமாறு கோரி தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கருக்கு விஜய் அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சி என்ற அடிப்படையில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சி அமைக்க வாய்ப்பு வழங்க வேண்டும் என விஜய் வலியுறுத்தியுள்ளார். மேலும், சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு 14 நாட்கள் கால அவகாசம் வேண்டும் என்றும் அவர் ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆளுநருக்கு அனுப்பப்பட்ட இந்தக் கடிதத்தைத் தொடர்ந்து, விரைவில் பதவியேற்பு விழா நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளன. ஆளுநர் தரப்பிலிருந்து இதற்கான நேரம் மற்றும் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதால், தமிழக அரசியல் களம் பெரும் எதிர்பார்ப்புடன் காணப்படுகிறது.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…