Categories: சினிமா

சொன்ன சொல்ல காப்பாற்றிய ரோகினி.. பிசினஸ்-அ டெவலப் பண்ண பிளான் போடும் முத்து.. சிறகடிக்க ஆசை டுடே..!

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது என்பதை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.

விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் ரோகினி ஜீவா கொடுத்த பணத்தை எடுத்து முத்துக்கு கொடுத்து விடலாம் என்று பிளான் போடுகின்றார். அதன்படி இரண்டு லட்சம் ரூபாய் எடுத்துக் கொண்டு வீட்டிற்கு செல்கிறார்கள். பின்னர் முத்துவையும் மீனாவையும் அழைத்த ரோகினி அந்த பணத்தை அண்ணாமலை இடம் கொடுக்கிறார்கள்.

நாங்கள் மீனாவின் நகைக்கான பணத்தை கொடுக்கிறோம் என்று கூறியிருந்தோம். சொன்னபடி முதலில் இரண்டு லட்சம் ரூபாய் கொடுக்க வந்திருக்கிறேன். இந்தாங்க அங்கிள் வாங்கிக்கோங்க என்று அண்ணாமலை இடம் கூறுகிறார் ரோகிணி. உடனே அது என்னுடைய பணம் இல்லை. யாருக்கு சேரணுமோ அவங்க கிட்ட போய் கொடுங்க என்று சொல்லுகிறார் ரோகிணி. உடனே மனோஜ் ரோகினியிடம் இருந்து பணத்தை வாங்கி முத்துவிடம் கொடுக்க முதலில் முத்து வாங்க மறுக்கின்றார்.

எங்களுக்கு மொத்த பணம்தான் வேண்டும். அதில் கொஞ்ச பணத்தை கொடுத்து விட்டு மீதியை அப்படியே அமுக்கிக் கொள்ளலாம் என்று பார்க்கிறீர்களா? என கேட்க நான் மீத பணத்தை கட்டாயம் திருப்பிக் கொடுத்து விடுவேன் என்று ரோகினி கூறுகிறார். இதை எடுத்து எதுவும் பேசாமல் முத்து அந்த பணத்தை வாங்கிக் கொள்கின்றார். அப்போது ரோகிணி இன்னும் மீதமுள்ள 2 லட்சம் ரூபாய் பணத்தை நான் சீக்கிரம் தந்து விடுகிறேன் என்று சொல்கிறார் .

இதை பார்த்த விஜயா உங்களுக்கு இவ்வளவு பணம் எப்படி கிடைத்தது என்று கேட்க என் அப்பாவிடம் வாங்கி நான் அனுப்பி வைத்தேன் என்று கூறுகிறார் . உடனே கேட்டது தான் கேட்ட முழு பணத்தையும் கேட்டு அவங்க மூஞ்சில எரிஞ்சு இருக்கலாமே என்று கூறுகிறார். மேலும் மொத்த பணத்தையும் கொடுக்க வேண்டிய வேலையை பாருங்கள் என்று சொல்லிவிட்டு சென்று விடுகின்றார்.

உடனே ரோகினி எல்லாமே கூடிய சீக்கிரம் கொடுத்து விடுவோம் என்று பிசினஸ் பண்ணும் தைரியத்தில் பேசுகிறார். இதைத் தொடர்ந்து இந்த பணத்தை வைத்து நகை வாங்கலாம் என்று மீனாவிடம் கூறுகிறார். ஆனால் மீனா எனக்கு இப்போது நகை வேண்டாம். மாடியில் நமக்கு ஒரு ரூம் கட்ட வேண்டும் . அதற்கு நாம் நல்ல சம்பாதிக்கணும். இந்த பணத்தை வைத்து இன்னொரு கார் வாங்கி ஒரு டிரைவர் போட்டு பிசினஸ் பண்ணலாம் என்று கூறுகிறார்.

இந்த ஐடியா முத்துக்கு நல்லதாக பட வேறொரு காரை வாங்க முடிவு செய்கிறார். இந்நிலையில் மீனா மாமா அத்தை இடம் பேசவே மாட்டேங்கிறார். இதற்கு ஏதாவது ஒரு வழி செய்ய வேண்டும் என்று கூறுகின்றார். நாம் ஏன் இதெல்லாம் செய்ய வேண்டும் கோபம் தீர்ந்து விட்டால் அவர்களை பேசிக்கொள்வார்கள் என்று ஸ்ருதி சொல்கின்றார். உடனே மீனா அப்படியெல்லாம் விட்டுவிட முடியாது.

நாம ஏதாவது முயற்சி பண்ணி அத்தையும் மாமாவையும் சேர்த்து வைத்து விட வேண்டும் என்று கூறுகின்றார். இதையடுத்து வழக்கம்போல் மீனா விஜய்யுடன் பேச செல்லும்போது விஜயா கண்டபடி மீனாவை திட்டி விடுகின்றார். அதற்கு ஸ்ருதி உங்க மேல தப்பா வச்சுக்கிட்டு எதுக்கு மீனாவை திட்டுறீங்க. நீங்க பண்ண தப்புக்கு மீனாவிடம் இப்போது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பேசுகின்றார். ஆனால் மீனா அதெல்லாம் ஒன்னும் தேவை இல்ல, அத்தை மாமாவிடம் பேசினால் போதும் என்று விஜயாவிடம் கெஞ்சி கேட்கின்றார். இப்படி தான் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Mahalakshmi

Recent Posts

பகீர் கிளப்பும் ரவி மோகன் வீட்டு விவகாரம்… நள்ளிரவில் போலீசாருக்கு வந்த அந்த ஒரு போன் கால்… போலீஸ் விசாரணையில் வெளியான ஷாக் தகவல்….!

சென்னை நீலாங்கரையில் உள்ள பிரபல நடிகர் ரவி மோகனின் வீட்டைச் சுற்றி தற்போது ஒரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது. அவரது…

1 minute ago

திருச்செந்தூர் கோயிலில் திடீர் மாற்றம்…. ரூ.5,000-லிருந்து ரூ.30,000 ஆக உயர்ந்த கட்டணம்… பக்தர்கள் கடும் அதிர்ச்சி….!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அபிஷேகம், சண்முகார்ச்சனை, தங்கத்தேர் உலா உள்ளிட்ட முக்கியக் கட்டண சேவைகளின் விலையை பெருமளவில் உயர்த்த…

13 minutes ago

“7 வயசுல ஆரம்பிச்ச நரகம்”…. சொந்த மகளை 10 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த தந்தை… மொபைலில் இருந்த ‘ChatGPT’ மூலம் சிறுமி செய்த காரியம்.. திகைத்துப்போன போலீசார்….!

மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையின் நியூ பன்வெல் பகுதியில், சொந்த வீட்டிலேயே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நரக வேதனையை…

20 minutes ago

“அப்பா என்னை கூட்டிட்டு போயிடுப்பா”… 6 வயது சிறுவனின் கடைசி ஆசை…. கோவையில் நடந்த நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!

கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது மகனைப் பெற்ற தாயும் அவரது கள்ளக்காதலனும் கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம்…

28 minutes ago

“நாங்க தான் அனுப்பினோம்-னு சொல்றாங்களே”… “இனி எவனாவது தொட்டா சும்மா விடமாட்டோம்”… சட்டமன்றத்தில் ருத்ரதாண்டவம் ஆடிய முதலமைச்சர் விஜய்…!

தமிழகச் சட்டமன்றப் பேரவையில் இன்று நடைபெற்ற ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, முன்னெப்போதும் இல்லாத வகையில்…

35 minutes ago

BREAKING: மூத்த பத்திரிகையாளர் பெரியசாமி காலமானார்…. திரையுலகையும் தாண்டிய சோகம்…!

தமிழ் ஊடக உலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்த மூத்த பத்திரிகையாளரும், பல இளம் ஊடகவியலாளர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் ஆசானாகவும்…

42 minutes ago