#image_title
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழு சீசன்கள் வெற்றிகரமாக முடிந்தது. தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசன் தொடங்க உள்ளது. இந்த சீசனில் யாரெல்லாம் பங்கேற்க போகிறார்கள் என்பது குறித்த தகவல் வெளியானது. இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருக்கும் அமலா ஷாஜி பிக் பாஸ் சீசன் 8-ல் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷாலின் சோயாவும், அவரது காதலர் டிடிஎப் வாசனும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர். வின்னர், கஜினி உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமான ரியாஸ்கான் பிக் பாஸ் சீசன் 8 பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது. நடிகை பூனம் பஜ்வா இப்போது பட வாய்ப்புகள் இல்லாமல் தவிக்கிறார். அவரும் இந்த சீசனில் கலந்து கொள்ள உள்ளார்.
பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் குமார், பிரபல நடிகரான பப்லு பிருதிவிராஜ் இந்த சீசனில் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது. விஜய் டிவியின் மூலம் பிரபலமான ரோபோ சங்கர் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறார். டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் பங்கிருக்கும் நடிகை சோனியா அகர்வால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது. மேற்கூறிய நபர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்த நிலையில் பிக் பாஸ் ஏழு சீசன்களையும் உலகநாயகன் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கினார். இதுவரை ஒளிபரப்பான சீசன்களில் கமல்ஹாசன் 130 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார். ஆனால் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கமல்ஹாசன் 150 கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறாராம். கமல்ஹாசன் பங்கேற்கும் எபிசோடுகள் அனைத்திற்கும் 130 கோடி ரூபாய் கொடுத்து முடித்து விடலாம் என தயாரிப்பு நிறுவனத்தினர் பிளான் போட்டனர். ஆனால் கமல் 150 கோடி ரூபாய் கேட்பதால் என்ன செய்வது என்று அறியாமல் இருக்கின்றனர்.
அயோத்தி ராமர் கோயிலுக்குக் கொடையாக வழங்கப்பட்ட 200 கிலோ வெள்ளிப் பொருட்களுக்கு இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வப் ரசீதோ அல்லது அங்கீகாரமோ…
மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வாவில், ஒரு வயதுக் குழந்தை எல்.இ.டி விளக்கு பொருத்தப்பட்ட ராக்கியுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு பயங்கரமான…
உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில், 70 வயது முதியவர் ஒருவருக்கு நேர்ந்த கொடூரமான மற்றும் அத்துமீறிய அநீதி பெரும்…
ஆளுநர் என்பவர் வெறும் மேலாளர் போன்றவர் தான்; ஆளுநரே தேவையில்லை என்பது தான் எங்களின் கொள்கை முடிவே" எனப் பேசியிருந்த…
தமிழகச் சட்டப்பேரவை விவாதத்தின்போது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பேசியதற்கு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக முதன்மைச் செயலாளருமான உதயநிதி…
தமிழகச் சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஆற்றிய உரைக்கு, திமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய…