விஜய் டிவியில் கடந்த அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் பிக்பாஸ் சீசன் 9 துவங்கிய போது பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த நடிகர் மற்றும் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் விஜய் சேதுபதி, வீட்டில் உள்ள பகுதிகளை எல்லாம் சுற்றி காட்டி பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார். இப்போது 90 நாட்கள் கடந்த நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் நடிகர் விஜய் சேதுபதி திடீரென என்ட்ரி கொடுத்தது அங்கிருந்த போட்டியாளர்களை அதிர்ச்சியடைய வைத்தது. பிறகு அவர்கள் உற்சாகமாகி அவரை வரவேற்றனர்.
டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் அதிக மதிப்பெண்களை பெற்று போட்டியாளர் அரோரா வெற்றி பெற்று, பைனலுக்குள் முதல் ஆளாக நுழைந்திருக்கிறார். அதற்கான டிக்கெட்டை வழங்குவதற்காக நடிகர் விஜய் சேதுபதி பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தார். கார்டன் ஏரியாவில் அலங்கரிக்கப்பட்ட மேடைக்கு பின்புறம் கதவை திறந்து திடீரென வந்த அவரை பார்த்து பிக்பாஸ் போட்டியாளர்கள் முதலில் ஷாக் ஆகிவிட்டனர்.
அரோராவை மேடைக்கு அழைத்து டிக்கெட் டூ பினோலே டிக்கெட்டை அவரிடம் கொடுத்த விஜய் சேதுபதி பிறகு வீட்டுக்குள் வந்து கிச்சன் பகுதியில் இருந்த அடுப்பு மேடையில் அமர்ந்தபடி விக்கல்ஸ் விக்ரம் அரோரா சாண்ட்ரா கானா வினோத் சபரி மற்றும் திவ்யா கணேஷ் ஆகியோரிடம் பேசிக்கொண்டு இருந்தார். அவருக்கு தந்த சாக்லேட்டை சுவைத்து சாப்பிட்ட பிறகு போட்டியாளர்களுக்கு வாழ்த்துகளை சொல்லிவிட்டு விஜய் சேதுபதி அங்கிருந்து வெளியே வந்து பிறகு வந்த கதவு வழியாகவே வெளியேறி சென்றார்.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…