Categories: சினிமா

தவறான முடிவால் வந்த விளைவு… படம் இல்லாமல் அவல நிலைக்கு தள்ளப்பட்ட நடிகர் விஜய்சேதுபதி.. அட கொடுமையே..

Spread the love

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இடத்தில் இருந்தவர் நடிகர் விஜய் சேதுபதி. துவக்கத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தார். தென்மேற்கு பருவக்காற்று படம்தான் அவருக்கு நடிகர் என்ற அடையாளத்தை கொடுத்தது. தொடர்ந்து நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், சூது கவ்வும், பீட்சா உள்ளிட்ட படங்களில் விஜய் சேதுபதியின் நடிப்பு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. ஒரு கட்டத்தில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகராக விஜய் சேதுபதியை கொண்டாட துவங்கினர். தொடர்ந்து அவர் நல்ல கேரக்டர் நிறைந்த படங்களில் அவர் நடித்திருந்தால், அப்படியே அவர் வேற லெவலில் சினிமா பயணத்தை தொடர்ந்திருக்கலாம்.

ஆனால் திடீரென அவர் கமர்ஷியல் ஹீரோவாக மாறி, அதிரடி சண்டைக்காட்சிகளில் ஹீரோயிசம் காட்டத் துவங்கினார். மாஸ் நடிகராக தன்னை திரைபிம்பத்தில் காட்டினார். ஹீரோவாக இருந்த அவர் திடீரென வில்லனாகவும் ரஜினி, கமல், விஜய் போன்றவர்களின் படங்களில் நடித்தார். இப்படி ஹீரோ, வில்லன் என இரு தரப்பிலும் கமர்ஷியல் ஹீரோவாக தன்னை காட்டிக்கொண்ட அவரால், தொடர்ந்து தனக்கான ஒரு இடத்தை தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை.

இதுகுறித்து எழுத்தாளர் ராஜகம்பீரன் கூறுகையில், பக்கத்து வீட்டு பையன் நடிகர் முரளியை போல இருக்கிறார் என்றுதான் விஜய் சேதுபதியை ரசிகர்கள் துவக்கத்தில் பார்த்தனர். முதலில் நல்ல கதைகளை, படங்களை தேர்வு செய்யும் வாய்ப்பு விஜய் சேதுபதிக்கு இல்லை. ஆனால் கிடைத்த படங்களில், கிடைத்த கேரக்டரில் நடித்து வெற்றி பெற்றார். பிறகு அவருக்கான படங்களை, கதைகளை தேர்வு செய்வதில் அவர் சரியான முடிவுகளை எடுக்கவில்லை.

கேரக்டர் நடிகரான அவர் சிவாஜியை போன்று சினிமாவில் பயணித்திருக்க வேண்டும். கமர்ஷியல் ஹீரோவாக மாறியதால், ஒரு நல்ல கேரக்டர் நடிகனை அவரே இழந்துவிட்டார். இல்லையென்றால், அவரது திரைபயணம் வேறுமாதிரியாக இருந்திருக்கும். விஜய் சேதுபதியை வில்லனாக நடிக்க சம்பளம் ரூ. 15 கோடி தர முன்வருகின்றனர். ஆனால், அவரே ஹீரோவாக நடிக்க ரூ. 6 கோடி தர யோசிக்கின்றனர். நல்ல கதைகளில் அவர் நடித்தால் மட்டுமே பழைய இடத்துக்கு வரமுடியும் என ராஜகம்பீரன் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

admin

Recent Posts

நீட் மாணவனின் கனவை காத்த அரசுப் பேருந்து ஓட்டுநர்…! 30 கி.மீ தூரம் பறந்து வந்த ஹால் டிக்கெட்…! நெகிழ்ச்சி சம்பவம்…!!

ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…

9 மணத்தியாலங்கள் ago

“வாழ்வதற்கே கஷ்டமாக இருக்குப்பா…” தந்தை முன் கதறிய நீதிபதி மகன்….! டெல்லியில் நடந்த சோகம்..!!

டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…

9 மணத்தியாலங்கள் ago

இனி அந்த எண்ணமே வராது…! மின்விசிறிகளை சுற்றி இரும்பு வலைகள்…. இது நிரந்தர தீர்வா…? இணையத்தில் விவாதத்தை கிளப்பிய சம்பவம்…!!

இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…

10 மணத்தியாலங்கள் ago

ஒரு செக்யூரிட்டியின் ‘மாஸ்’ வளர்ச்சி…! 5 வருடத்தில் சம்பளம் இவ்வளவு உயர்வா…? வியக்க வைக்கும் பதிவு…!

சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…

10 மணத்தியாலங்கள் ago

பேத்தி வயசு புள்ள அது..! மனசாட்சியே இல்லாம சீரழித்து, கல்லால் நசுக்கி கொன்ற 65 வயது கொடூரன்… மாட்டுசாணத்திற்குள் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…

11 மணத்தியாலங்கள் ago

“விஜய்க்கு முத்தம் கொடுக்க ஆசை.. ஆனா இப்ப முடியாது!”… வடிவேலுவை அடிக்க துடிக்கும் நடிகை சோனா… கோலிவுட்டில் பெரும் பரபரப்பு…!!!

திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…

11 மணத்தியாலங்கள் ago