Categories: சினிமா

விஜய்சேதுபதி தேடும் லட்சுமி யாருதான்பா..! மகாராஜா படத்தின் விமர்சனம்.. 50வது படத்தில் வெற்றி பெற்றாரா மக்கள் செல்வன்..?

Spread the love

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் மகாராஜா திரைப்படத்தின் பிரீமியர் ஷோ விமர்சனம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் 50-வது திரைப்படம் மகாராஜா இந்த திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஜய் சேதுபதி. படிப்படியாக முன்னேறி தற்போது பாலிவுட்டில் நடிக்கும் அளவிற்கு உயர்ந்து நிற்கின்றார். விஜய் சேதுபதியின் கால்ஷீட் வேண்டி பல பிரபலங்கள் காத்திருக்கிறார்கள்.

முன்பு போல் இல்லாமல் தற்போது சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருகின்றார். குரங்கு பொம்மை என்ற திரைப்படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் மகாராஜா. இப்படம் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படமாகும். இப்படத்தின் பத்திரிகையாளர் காட்சி திரையிடப்பட்ட நிலையில் படத்தின் முழு விமர்சனத்தை பத்திரிகையாளர்கள் கூறியிருக்கிறார்கள்.

மகாராஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி முடி திருத்தும் தொழிலாளியாக நடித்திருக்கின்றார் விபத்து ஒன்றில் தனது மனைவி திவ்யபாரதியை இழந்து விட மகளை மிகவும் கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறார். மற்றொரு பக்கம் திருட்டு தொழிலில் செய்யும் அனுராக் காஷ்யப், திருடி செல்லும் இடங்களில் எல்லாம் பெண்களை பலாத்காரம் செய்வதை வாடிக்கையாக வைத்து வருகின்றார்.

இதற்கிடையில் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று லட்சுமியை காணவில்லை என்று விஜய் சேதுபதி புகார் அளிக்க லட்சுமி யார் என போலீசார் தலையை பிச்சு கொண்டிருக்கிறார்கள். இப்படி படத்தின் முதல் பாதி நிறைவடைய இரண்டாம் பாதியில் லட்சுமியை கண்டுபிடித்துக் கொடுத்தால் பெரிய தொகையை லஞ்சமாக கொடுப்பதாக காவல்துறையினருக்கு டீல் பேசுகின்றார்.

கெட்ட போலீசாக வரும் நட்டி நட்ராஜ் அந்த லட்சுமி தேட பின்னால் பலத்திற்கும் விஷயங்கள் வெளி வருகின்றது . ட்விஸ்ட்க்கு மேல் ட்விஸ்ட் வைத்து இரண்டாம் பாதியில் கிளைமாக்ஸ் மிகப்பெரிய ட்விஸ்ட்-ஆக அமைகின்றது. ஒவ்வொரு காட்சியிலும் மகாராஜாவாக நடித்து அசத்தியிருக்கின்றார் விஜய் சேதுபதி. நீண்ட நாட்களுக்கு பிறகு அவரின் கம்பாக்காக இந்த திரைப்படம் இருக்கின்றது. தரமான படத்தை தனது ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று மெனக்கெட்டை படத்தில் நடித்திருக்கின்றார் விஜய் சேதுபதி.

அவர் மட்டும் இல்லாமல் வில்லனாக நடித்த நட்டி நட்ராஜ், அனுராக் காசிப் ஆகியோரும் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். நித்திலன் சுவாமிநாதனின் இயக்கம் மிகச் சிறப்பாக இருந்தது. படத்தில் ஒரே ஒரு பாடல் என்றாலும் அப்பாடல் மனதை வருடும் வகையில் இருந்தது. முதல் பாதியில் சில இடங்களில் என்ன நடக்கின்றது என்பது தெரியாமல் ரசிகர்களை குழப்பினாலும் கடைசியில் அனைத்தையும் விளக்கி படம் ஒரு மாஸ்டர் பீஸ் படமாக தயாராகி இருக்கின்றது. இந்த படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பு கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Mahalakshmi

Recent Posts

காப்பாத்துங்க…! கொழுந்துவிட்டு எரிந்த தீ… நெருப்பு வளையத்தில் சிக்கிய ஐடி அதிகாரிகள்… சினிமா பாணியில் அரங்கேறிய மாஸ் மீட்பு…!!

மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…

1 மணத்தியாலம் ago

“ஆட்டோ டயரில் நாய் சிறுநீர் கழித்ததால் வந்த வினை…” 23 வயது இளைஞர் கத்தியால் குத்தி கொலை…! சினிமாவை மிஞ்சிய பயங்கர சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…

1 மணத்தியாலம் ago

“அப்பாவை விட்டுடுடா”கதறிய குடும்பம்… போதையில் வெறிச்செயல் செய்த பெற்ற மகன்… நடுரோட்டில் நடந்த நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…

1 மணத்தியாலம் ago

ஈரான் அளித்த அதிரடி ஆஃபர்… அமெரிக்க வீரர்கள் சிக்குனா விடாதீங்க… ஈரானியர்களுக்கு கொட்டும் பரிசு மழை… ட்ரம்ப் எடுக்க போகும் முடிவு என்ன?…

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…

2 மணத்தியாலங்கள் ago

சினிமா பாட்டு தகராறா?.. இல்லை பழிக்குப் பழியா?.. ரத்த வெள்ளத்தில் கோவில் வளாகம்… இரட்டைக் கொலையில் வெடிக்கும் புது ட்விஸ்ட்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…

2 மணத்தியாலங்கள் ago

தாயுடன் நெருக்கம்… மகனுக்கு மிரட்டல்… செல்போனை நோண்டிய போலீசுக்கு காத்திருந்த அடுத்த அதிர்ச்சி… இறுதியில் நீதிமன்றம் கொடுத்த மரண அடி…!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…

2 மணத்தியாலங்கள் ago