#image_title
தெகிடி, மேயாத மான் உள்ளிட திரைப்படங்களில் நடித்த பிரதீப் விஜயன் வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமாவில் கடந்த 2013 ஆம் ஆண்டு மிர்ச்சி சிவா வசுந்தரா ஆகியோர் நடிப்பில் வெளியான சொன்னா புரியாது என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர்தான் பிரதீப் கே விஜயன். பின்னர் பல திரைப்படங்களில் நடித்து வந்துள்ளார். தொடர்ந்து தெகிடி திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை கொடுத்தது.
அதன் பின்னர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஒரு நாள் கூத்து, என்னோடு விளையாடு, மீசையை முறுக்கு, மேயாத மான், நெஞ்சில் துணிவிருந்தால், திருட்டுப் பயலே 2, இரும்புத்திரை, ஆடை, கென்னடி கிளப் ,ஹீரோ, மனம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். கடைசியாக ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த ருத்ரன் திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார்.
பி.டெக் பட்டதாரியான இவர் நடிப்பை தாண்டி பல படங்களுக்கு சப் டைட்டில் போட்டு கொடுக்கும் பணியையும் செய்து வந்தார். சினிமா மீது இருந்த ஆர்வம் காரணமாக தன்னை ஒரு நடிகராக மாற்றிக்கொண்டார். சென்னை பலாவாக்கத்தில் தனியாக வசித்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களாக அவரது நண்பர்கள் இவருக்கு போன் செய்த நிலையில் போனை அவர் எடுக்கவில்லை.
பின்னர் தங்கி இருந்த வீட்டிற்கு சென்று கலவை தட்டிப் பார்த்தபோது கதவு உள்பக்கம் தாப்பாழ் போடப்பட்டிருந்தது. மேலும் துர்நாற்றம் அதிகமாக வந்ததால் காவல்துறையினருக்கு அவரது நண்பர்கள் தகவல் அளித்துள்ளனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே போய் பார்த்தபோது இறந்த நிலையில் பிரதீப் கே விஜயன் கிடந்துள்ளார்.
அவர் மாரடைப்பு காரணமாக இருந்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது . இருப்பினும் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரேத பரிசோதனையில் தான் இவருக்கு என்ன நடந்தது என்பது தெரிய வரும். இரண்டு நாட்களாக வீட்டுக்குள் இறந்து கிடந்த இவரது உடல் தற்போது பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…