#image_title
பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி நான் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். முன்னதாக விஜய் ஆண்டனி இசையில் உருவான நாக்கு முக்க, ஆத்திச்சூடி, மச்சக்கன்னி, மஸ்காரா உள்ளிட்ட பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனது. முதல் படமே வித்தியாசமான கதை களத்தோடு அமைந்து நல்ல வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து சலீம், சைத்தான், பிச்சைக்காரன் உள்ளிட்ட படங்களில் விஜய் ஆண்டனி நடித்தார்.
நடிகராக இசையமைப்பாளராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், எடிட்டர், இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர். பிச்சைக்காரன் 2 படத்தின் மூலம் இயக்குனராகவும் உருவானார். கடைசியாக விஜய் ஆண்டனி நடிப்பில் ரோமியோ திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பு பெற்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய் ஆண்டனியின் மகள் மீரா உயிரிழந்தார்.
ஏற்கனவே அமைதியான குணமுடைய விஜய் ஆண்டனி தனது மகள் இறப்பிற்கு பிறகு மேலும் அமைதியாகிவிட்டார். படத்தின் ப்ரோமோஷன் மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது விஜய் ஆண்டனி செருப்பு போடாமல் தான் வருகிறார். இந்த நிலையில் ஹைதராபாத்தில் வைத்து விஜய் ஆண்டனி நடித்த மழை பிடிக்காத மனிதன் பட புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனியிடம் செருப்பு போடாமல் வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த விஜய் ஆண்டனி நான் சில நாட்களுக்கு முன்பு செருப்பு அணியாமல் சுற்றித்திரிந்தேன். அந்த அனுபவம் எனக்கு நன்றாக இருந்தது போல் தோன்றியது. செருப்பு அணியாத போது மனதுக்கு அமைதி கிடைத்தது.
ஆரோக்கியத்துக்கும் அது நல்லது தான். அது மட்டும் இல்லாமல் நமக்குள் தன்னம்பிக்கையை கூட இது வளர்க்கும். எப்போது நான் செருப்பு போடாமல் சுற்ற ஆரம்பித்தேனோ அந்த சமயத்தில் இருந்து எந்த வித நெருக்கடிக்கும் ஆளாகவில்லை. வாழ்நாள் முழுவதும் செருப்பு அணியாமல் இருக்க விரும்புகிறேன். இதுதான் சந்தோஷமாக இருக்கிறது என கூறியுள்ளார்.
அண்மைக் காலமாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியைத் தங்கள் வசம் இழுக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், பாஜகவும் தீவிரமாக…
தமிழக அரசியல் களம் தற்போது 'தவெக'ஆட்சி நீடிப்பது யாரால்?' என்ற காரசாரமான விவாதத்தால் சூடேறியுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில்…
தமிழக அரசியல் களம் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் உருட்டல் மிரட்டல்களுக்கு எல்லாம் திமுக ஒருபோதும் பயப்படாது…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், பெரும்பான்மைக்குக் கூட்டணி தேவைப்பட்ட சூழலில் விசிக,…
தமிழ் சின்னத்திரை வரலாற்றில் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி, 90-கள் மற்றும் 2000-களின் தொடக்கத்தில் ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளையடித்தவர்…
பங்குச்சந்தைக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருந்த போர்ச் சூழல் நீங்கி, அமைதி பேச்சுவார்த்தை தொடங்கியதால் சந்தை மீளும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,…