![vijay 17 - Tamizhanmedia.net](https://tamizhanmedia.net/wp-content/uploads/2024/06/vijay-17.jpg)
CINEMA
செருப்பு போடாமல் இருக்கும்போது அது கிடைக்கிறது.. மனம் திறந்து பேசிய நடிகர் விஜய் ஆண்டனி..!!
பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி நான் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். முன்னதாக விஜய் ஆண்டனி இசையில் உருவான நாக்கு முக்க, ஆத்திச்சூடி, மச்சக்கன்னி, மஸ்காரா உள்ளிட்ட பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனது. முதல் படமே வித்தியாசமான கதை களத்தோடு அமைந்து நல்ல வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து சலீம், சைத்தான், பிச்சைக்காரன் உள்ளிட்ட படங்களில் விஜய் ஆண்டனி நடித்தார்.
நடிகராக இசையமைப்பாளராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், எடிட்டர், இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர். பிச்சைக்காரன் 2 படத்தின் மூலம் இயக்குனராகவும் உருவானார். கடைசியாக விஜய் ஆண்டனி நடிப்பில் ரோமியோ திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பு பெற்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய் ஆண்டனியின் மகள் மீரா உயிரிழந்தார்.
ஏற்கனவே அமைதியான குணமுடைய விஜய் ஆண்டனி தனது மகள் இறப்பிற்கு பிறகு மேலும் அமைதியாகிவிட்டார். படத்தின் ப்ரோமோஷன் மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது விஜய் ஆண்டனி செருப்பு போடாமல் தான் வருகிறார். இந்த நிலையில் ஹைதராபாத்தில் வைத்து விஜய் ஆண்டனி நடித்த மழை பிடிக்காத மனிதன் பட புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனியிடம் செருப்பு போடாமல் வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த விஜய் ஆண்டனி நான் சில நாட்களுக்கு முன்பு செருப்பு அணியாமல் சுற்றித்திரிந்தேன். அந்த அனுபவம் எனக்கு நன்றாக இருந்தது போல் தோன்றியது. செருப்பு அணியாத போது மனதுக்கு அமைதி கிடைத்தது.
ஆரோக்கியத்துக்கும் அது நல்லது தான். அது மட்டும் இல்லாமல் நமக்குள் தன்னம்பிக்கையை கூட இது வளர்க்கும். எப்போது நான் செருப்பு போடாமல் சுற்ற ஆரம்பித்தேனோ அந்த சமயத்தில் இருந்து எந்த வித நெருக்கடிக்கும் ஆளாகவில்லை. வாழ்நாள் முழுவதும் செருப்பு அணியாமல் இருக்க விரும்புகிறேன். இதுதான் சந்தோஷமாக இருக்கிறது என கூறியுள்ளார்.