#image_title
‘மழை பிடிக்காத மனிதன்’ என்ற திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவிற்கு நடிகர் விஜய் ஆண்டனி சாயம் பூசிய முகத்துடன் வந்ததை பார்த்து பலரும் ஷாக்காகி இருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் வித்யாசமான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கின்றார் விஜய் ஆண்டனி. தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், பின்னணி பாடகர், நடிகர், எடிட்டர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்ட இவர் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். ஜீவா சங்கர் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு சைக்கலாஜிக்கல் திரில்லர் படமாக வெளிவந்த நான் என்ற திரைப்படத்தில் நடித்த அறிமுகமானார்.
இந்த படத்தில் சித்தார்த், ரூபா மந்திரி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தார்கள். அதை தொடர்ந்து சலீம், பிச்சைக்காரன், கொலைகாரன், கோடியில் ஒருவன், காளி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார் .அதிலும் பிச்சைக்காரன் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது. இதனால் பிச்சைக்காரன் 2 என்ற திரைப்படத்தை இவரே இயக்கி நடித்திருந்தார். பின்னர் கடைசியாக ரோமியோ என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது. இப்படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான திரைப்படங்கள் தான் மழை பிடிக்காத மனிதன். இந்த படத்தை கோலிசோடா, 10 எண்றதுக்குள்ள உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய விஜய் மில்டன் இப்படத்தை அதிக பட்ஜெட்டில் இயக்கியிருக்கின்றார். இப்படத்தில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார், பிரபல கன்னட ஹீரோ டாலி, தனஞ்செயன், மேகா ஆகாஷ், சரண்யா பொன்வண்ணன், தலைவாசல் விஜய், ஏஎல் அழகப்பன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள்.
சத்யராஜ் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார். இந்த திரைப்படத்தை இன்ஃபினிட்டி பிலிம்ஸ் வெர்சன்ஸ் சார்பில் டி லலிதா பி பிரதீப் மற்றும் பங்கஜ் போகர் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் கவிதை தரத்துடன் ஆக்சன் என்டர்டைன் திரைப்படமாக இருக்கும் என்று கூறப்படுகின்றது. இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில் நடிகர் விஜய் ஆண்டனியும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்தடைந்தார். ஆனால் அவர் சற்று வித்தியாசமான வேடத்தில் வந்திருந்தார். உடம்பு முழுவதும் ஒரு பக்கம் சாயம் முகத்தில் கை, கால் என அனைத்து பக்கங்களிலும் கருப்பு நிற சாயத்தை பூசிக்கொண்டு வந்தார்.
பின்னர் நிகழ்ச்சி தொடங்கிய பிறகு தொகுப்பாளர் கூறினார். இந்த நிகழ்ச்சி தொடங்கிய காரணத்தினால் ஒரு படப்பிடிப்பு தளத்திலிருந்து அப்படியே வந்துவிட்டார். விஜய் ஆண்டனி மேக்கப்பை கலைப்பதற்கு ஒரு மணி நேரம் ஆகும் என்பதால் தன்னால் எந்த தாமதமும் ஏற்படக் கூடாது என்பதற்காக மிக டெடிகேஷன் உடன் அப்படியே வந்திருக்கின்றார். அவருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் என்று கூறியிருந்தார். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
திருப்பரங்குன்றம் மலையைத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவது தொடர்பான வழக்கில், மலையை மறு அளவீடு செய்ய நான்கு வாரக் கால…
தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களைக் குறிவைத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் (DVAC) இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.…
கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டம், நாவல்குண்ட் தாலுகாவைச் சேர்ந்த பிரியங்கா கமலாகர் (29) என்ற இளம் பெண், திருமணமாகி இரண்டே…
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய காதலனுடன் செல்வதைத் தடுத்த பெற்ற தாயை, "நீ செத்துப்போ" என்று…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது ஆதரவு சக்திகளுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை…
ஹைதராபாத்தில் 26 வயது இளம்பெண் ஒருவர் ஹோட்டல் அறை ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…