தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வளம் வரும் விக்னேஷ் சிவன், காத்து வாக்குல இரண்டு காதல் திரைப்படத்திற்கு பிறகு தல அஜித்தை வைத்து ஏ கே 62 திரைப்படத்தை இயக்குனர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அஜித்துக்கு விக்கி கூறிய கதை திருப்தி அளிக்காத காரணத்தால் இந்த படத்தில் இருந்து அவரை அதிரடியாக வெளியேற்றிவிட்டு மயில் தெரு மேனி இயக்கத்தில் அஜித் தனது நடிப்பை தொடங்கியுள்ளார்.
இதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் தனது மனைவி நயன்தாரா தொடங்கியுள்ள நிறுவனங்களில் பணிகளிலும் தயாரிப்பு நிறுவனம் பணிகளிலும் பிசியாக இருந்து வருகிறார் . இந்த நிலையில் இயக்குணரும் நடிகருமான பிரதீப் ரங்க நாதனை வைத்து இயக்க உள்ள அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு விக்னேஷ் சிவன் பூஜை போட்டு உள்ளார்.
இந்த படத்தின் பூஜை நேற்று சென்னையில் எளிமையாக நடைபெற்றது. அதையும் தயாரிப்பாளர் லலித் குமார், இயக்குனர் விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன் மற்றும் நடிகை கீர்த்தி ஷெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அந்தத் திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு அக்கா கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்க உள்ள நிலையில் நேற்று நடைபெற்ற பூஜையில் நயன்தாரா கலந்து கொள்ளவில்லை. ஏற்கனவே இந்த திரைப்படம் குறித்த தகவல்கள் வெளியாகிய நிலையில் நேற்று படத்திற்கு பூஜை போடப்பட்டுள்ளது.
லவ் டுடே திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு பிரதீப் நடிக்க உள்ள இந்த திரைப்படத்திற்கு LIC என்றும் பட குழு பெயர் இட்டுள்ளது. தற்போது இந்த திரைப்படத்திற்கான பூஜை போடப்பட்ட படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமூக வலைதளங்களில் ஒரு சிறுவனின் கால்பந்து விளையாடும் வீடியோ தற்போது அதிவேகமாக வைரலாகி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.…
தமிழ்நாட்டில் தற்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், தற்போதைய சட்டசபைக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியான…
கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அருகே உள்ள மருதூர் கிராமத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் கண்ணன், தனது நெருங்கிய நண்பரான பாரதிராஜாவின் தங்கையைக்…
தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது 52-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவதையொட்டி, தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள்…
திரைப்படங்களில் ஓய்வில்லாமல் நடனமாடுவது, சண்டைக் காட்சிகளில் மிரட்டுவது எனத் தத்ரூபமாக நடிக்கும் முதலமைச்சர் விஜய், படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியானவர்…
ஈரான் அரசு ஹார்முஸ் நீரிணையை கப்பல் போக்குவரத்திற்கு மூடுவதாக அறிவித்துள்ளதால், இந்தியாவிலிருந்து மேற்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பாஸ்மதி…