ஆடுகளம் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ஒத்த சொல்லால பாடல் குறித்து பேசியிருக்கிறார் நடன இயக்குனர் தினேஷ். வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் என்றாலே அதற்கு எப்போதும் தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கும்.ஹீரோக்களுக்காக படம் பார்த்து வரும் சூழலில் வெற்றிமாறனுக்காக படம் பார்க்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
அந்த அளவுக்கு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.தனுஷை வைத்து இவர் இயக்கிய பொல்லாதவன்,விசாரணை, வடசென்னை,அசுரன் போன்ற தொடர்கள் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.அந்த வரிசையில் இடம் பிடித்த திரைப்படம் தான் ஆடுகளம் சர்வதேச அளவில் மிகப்பெரிய விருதுகளை அள்ளிக் குவித்தது.
இந்த திரைப்படத்தில் அனைத்து கதாபாத்திரங்களும் மிகவும் எதார்த்தமான முறையில் அமைந்திருக்கும். இந்தப் படத்தில் வெளியான பாடல்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட் தான்.அதிலும் ஒத்த சொல்லால பாடலுக்கு நடனம் ஆடாதவர்கள் யாருமே இருக்க முடியாது.இப்பாடலுக்கு நடனம் வைத்தவர் தினேஷ். இவர் ஒரு பேட்டியில் இப்பாடல் உருவான விதம் குறித்து தெரிவித்திருந்தார்.அதாவது இயக்குனர் வெற்றிமாறன் இவரிடம் கூறியதாவது.
இந்தப் பாடலில் ஒவ்வொரு ஸ்டெப்பும் ஏற்கனவே வடிவமைத்தது போன்று இருக்கக் கூடாது. எதார்த்தமானதாக அதாவது ஒரு பையனிடம் ஒரு பெண் தனது காதலை கூறினால் அந்த இளைஞன் எவ்வளவு சந்தோஷப்படுவான் என்பதை வெளிப்படுத்தும் வகையில் இப்பாடல் எதார்த்தமாக இருக்க வேண்டும் என்று கூறினாராம்.அவர் கூறியது போல் எடுப்பதற்கு மிகவும் கஷ்டமாக தான் இருந்தது என்று கூறியிருக்கிறார் டான்ஸ் மாஸ்டர் தினேஷ்.