Connect with us

தோனியை விட அதிகம் ட்ரெண்டான பெண்.. நெட்டிசன்கள் வலைப்போட்டு தேடும் இவர் இந்த சீரியல் நடிகை தானா..?

CINEMA

தோனியை விட அதிகம் ட்ரெண்டான பெண்.. நெட்டிசன்கள் வலைப்போட்டு தேடும் இவர் இந்த சீரியல் நடிகை தானா..?

நேற்றைய முன்தினம் சென்னை சிதம்பரம் மைதானத்தில் CSK மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே மேட்ச் நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த CSK அணி 161 ரன்கள் எடுத்தது. அணியின் கேப்டன் அதிகப்படியாக 62 ரன்கள் எடுத்தார் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 20 ஓவர் முடிவில் CSK அணி ௧௬௧ ரன்கள் குவித்தது. இதனை இலக்காக கொண்டு களமிறங்கிய பஞ்சாப் அணி ௭ விக்கெட் வித்தியாசத்தில் இந்த இலக்கை எட்டி வெற்றிபெற்றது.

இதனால் CSK அணி ரசிகர்கள் மிகவும் கவலையடைந்தனர். மைதானத்தில் இருந்த பல CSK fans-கு மிகவும் வருத்தத்தை தந்தது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் இளம் பெண் ஒருவரின் பக்கம் கேமரா திருப்பாத அவர் கொடுத்த அந்த சோகமான ரியாக்ஷன் பார்வையாளர்களை ஈர்த்தது. அதுமட்டுமில்லாமல், போட்டி முடிந்தவுடன் அவர் கொடுத்த ரியாக்ஷன் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது.

   

 

மேலும், இவர் யாரென்று நெட்டிசன்கள் சோசியல் மீடியா பக்கங்களில் வலைவீசி தேட ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையில் அவர் யாரென்று தற்போது தெரியவந்துள்ளது. அவர் வேறுயாருமில்லை தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வசுந்தரா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை தர்ஷனா ஸ்ரீபால் தான். இந்த சீரியலை தொடர்ந்து சித்தி 2 சீரியலில் இவர் நடித்துள்ளார். மேலும், கடந்த ஆண்டே தர்ஷனா இந்த சேரியலிலிருந்து வெளியேறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இவர் கழுத்தில் மஞ்சள் கயிறு ஒன்று இருந்தது, அதனை பார்த்த பலர் அதனை தாலி என்று நினைத்துவிட்டனர். உண்மையில் அது தாலி இல்லை எனவும் அது விசிலில் இருக்கும் மஞ்சள் கயிறு எனவும் சீரியல் நடிகை தர்ஷனா விளக்கமளித்திருந்தார்.

 

View this post on Instagram

 

A post shared by Dharshna Sripal (@dharshna.sripal)

author avatar
Archana
Continue Reading
To Top