#image_title
நடிகை வனிதா விஜயகுமார் சந்திரலேகா திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். அதன் பிறகு தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே வனிதா நடித்துள்ளார். இப்போதும் வனிதா படங்களில் நடித்து வருகிறார். இவரது மகள் ஜோவிகா பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். பிக் பாஸில் விசித்திரா அடிப்படை கல்வி அவசியம் என கூறினார்.
அதற்கு எதிராக பேசிய ஜோதிகா தனக்கு படிப்பு வராததால் தான் படிப்பை நிறுத்தினேன். ஒரு விஷயம் பிடிச்சா செய்யணும். பிடிக்கலன்னா செய்யக்கூடாது. அப்படித்தான் எனக்கு பிடித்ததை நான் செய்கிறேன் என சண்டை போட்டார். அந்த விவாதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமீபத்தில் வனிதா விஜயகுமார் தனது மகளுடன் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது வனிதா கூறியதாவது, ஜோவிகா ஸ்கூல்ல இருந்து என்ன கூப்பிட்டாங்கன்னா நான் பயந்துகிட்டே தான் போவேன். ஏன்னா அவர் பண்ண காரியம் அப்படி. நான் ஸ்கூலுக்கு போனா கன்ஃபார்மா உங்க பொண்ண கூட்டிட்டு போயிருங்க அப்படின்னு தான் சொல்லுவாங்க. அவளை நான் நிறைய ஸ்கூல் மாத்திட்டேன். கடைசியாக ஸ்கூல் பிரின்சிபல் என்ன கூப்பிட்டாரு. நானும் அங்க போனேன். ஜோவிகா கிளாஸ்க்கு உள்ள நுழைஞ்சேன்.
அப்போ கடைசி பெஞ்ச் அடியில உட்கார்ந்து காதை பொத்திகிட்டு இருந்தா. என்னன்னு கேட்கும்போது இங்க ரொம்ப சத்தமா இருக்கு. என்னால இங்க இருக்கவே முடியாது அப்படின்னு சொன்னா. இப்படி எல்லா வேலையும் ஜோவிகா பண்ணிருக்கா. நானே அவகிட்ட உனக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டேன். அதுக்கு ஜோவிகா நான் நடிக்கணும் அப்படின்னு சொன்னா. ஒரு பெரிய ஜோவிகாவுக்கு ஆசை என மகளை பற்றி வனிதா கூறியுள்ளார்.
வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி, ரக்ஷா பந்தன் பண்டிகை தினத்தன்று ஓர் அரிய பகுதியளவு சந்திர கிரகணம் நிகழவுள்ளது.…
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள கல்யாணி நகர் பகுதியில், சாலையில் நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்த நபரிடம் நூதன முறையில் பணம்…
கேரள பாஜக மாநில துணைத் தலைவராகச் செயல்பட்டு வந்த பிரபல மலையாள நடிகர் தேவன், அக்கட்சியின் செயல்பாடுகள் திருப்தியளிக்கவில்லை என்றும்,…
திமுக தொடக்கம் முதலே பெரியாரின் கடவுள் மறுப்பு மற்றும் பகுத்தறிவு கொள்கைகளைத் தனது அடிப்படை சித்தாந்தமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.…
மான்செஸ்டர் சிட்டி அணியின் முன்னணி கால்பந்து வீரரான எர்லிங் ஹாலண்ட், தனது புகழ்பெற்ற நீண்ட முடியை வெட்டி புதிய தோற்றத்திற்கு…
கினியா நாட்டின் தலைநகரான கோனாக்ரியில் அமைந்துள்ள மிகப்பெரிய குப்பைக் கிடங்கில், திடீரெனப் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு மலைபோலக் குவிக்கப்பட்டிருந்த…