Categories: சினிமா

இளையராஜாவின் ட்யூனைக் கேட்டு பின் வாங்கிய கவிஞர்கள்… அட இந்த பாட்டுக்குப் பின்னால் இப்படி ஒரு கதையா?

Spread the love

தமிழ் சினிமாவின் தனிப்பெரும் சாதனையாளர்களில் ஒருவர் இளையராஜா. உலகளவில் அவர் அளவுக்கு அதிக படங்களில் இசையமைத்த இசையமைப்பாளர் இல்லை. இப்போதும் தன்னுடைய 82 ஆவது  வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1500 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசமே பின்னணி இசையில் இளையராஜாவுக்கு நிகர் அவர் மட்டுமே. அவரின் வருகைக்குப் பிறகே தமிழ் சினிமாவில் பின்னணி இசையை இயக்குனர்கள் உணர ஆரம்பித்தார்கள் என்றால் அது மிகையாகாது.

இளையராஜா எவ்வளவுக்கெவ்வளவு எளிமையான ட்யூன்களை போட்டுள்ளாரோ அதுபோல பாடல் எழுதுவதற்கும் பாடுவதற்கும் கடினமான ட்யூன்களையும் போட்டு பாடல் ஆசிரியர்களை விழிபிதுங்க வைத்துள்ளார்.அப்படி அவர் பாக்யராஜின் படமான சின்னவீடு படத்துக்கு போட்ட ட்யூனைக் கேட்டு பாடல் ஆசிரியர்கள் பாடல் எழுதவே தயங்கியுள்ளனர்.

#image_title

அந்த ட்யூனை போட்டுக் கொடுத்த இளையராஜா, இந்த பாடலுக்கு யாரை வேண்டுமானாலும் பாடல் எழுத வைத்துக்கொள்ளுங்கள் என சொல்லிவிட்டாராம். பாக்யராஜ் இந்த ட்யூனை பாடல் ஆசிரியர் ஒருவருக்கு அனுப்பியுள்ளார். அந்த பாடல் ஆசிரியர் ட்யூனைக் கேட்டு தயங்கி, தன்னால் இந்த ட்யூனுக்கு எழுத முடியாது என சொல்லிவிட்டாராம். இதனால் கடுப்பான பாக்யராஜ் வேறு சில பாடல் ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ளார்.

அவர்களாலும் அந்த வித்தியாசமான ட்யூனுக்கு வார்த்தைகளைக் கோர்த்து பாடல் எழுத முடியவில்லை. இதனால் பாக்யராஜ் தன் படங்களில் அதிகமாக பாடல் எழுதாத வைரமுத்துவிடம் ட்யூனைக் கொடுத்துள்ளார். அவர் சில நாட்களை எடுத்துக்கொண்டு அந்த ட்யூனுக்கு பாடலை எழுதினாராம்.

அப்படி உருவான பாடல்தான் இன்றளவும் ரசிகர்களால் கேட்டு மகிழப்படும் ‘சிட்டுக்குருவி வெட்கப்படுது.. பெட்டைக் குருவி கற்றுத் தருதே” என்ற பாடல். இந்த ட்யூனுக்கு வைரமுத்து அழகான வரிகளை எழுதிய பாக்யராஜ் உள்ளிட்ட அனைவருக்குமே இன்ப அதிர்ச்சியாகதான் இருந்ததாம். அப்படிப்பட்ட ஒரு கெமிஸ்ட்ரி இளையராஜாவுக்கும் வைரமுத்துவுக்கும் இடையில் இருந்துள்ளது.

vinoth

Recent Posts

தோட்டத்தில் வைத்தியம்… விரட்டி விரட்டி மாமூல் கேட்ட போலீஸ்… வீடியோவால் வெடித்த சர்ச்சை… டி.ஐ.ஜி மணிவண்ணன் எடுத்த அதிரடி முடிவு…!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் பாரம்பரிய முறையில் வைத்தியம் பார்த்து வந்த நெடுஞ்செழியன் என்பவர், தன்னிடம் காவல்துறையினர் லஞ்சம் கேட்பதாக…

4 minutes ago

“உல்லாசத்துக்கு வரியா..?” புகைப்படத்தை காட்டி கல்லூரி நண்பன் மிரட்டல்… செல்போனால் வந்த வினை… உயிரை மாய்த்துக்கொண்ட இளம்பெண்…!!

கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதான வாணிஸ்ரீ, பெங்களூருவில் உள்ள நகைக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.…

13 minutes ago

“ஓடும் ரயிலில் நாயை இழுத்து செல்ல முயற்சி…” மனிதனின் அலட்சியத்தால் பரிதாபமாகப் பலியான வாயில்லா ஜீவன்…! நெஞ்சை உலுக்கும் வீடியோ…!!

நபர் ஒருவரின் அலட்சியமான மற்றும் அவசரச் செயலால், நாய் ஒன்று பரிதாபமாகத் தனது உயிரை இழந்துள்ள சம்பவம் சமூக வலைதளங்களில்…

14 minutes ago

“புகார் அளித்தால் அளித்துக் கொள்ளுங்கள்…” இணைப்பு விமானம் ரத்து… 2 நாட்கள் தவித்த பயணிகள்… டெல்லி விமான நிலையத்தில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் அலட்சியம்…!!

ஸ்ரீநகரிலிருந்து டெல்லி வழியாக மும்பை செல்வதற்காக இணைப்பு விமானத்தில் பயணித்த நபர் ஒருவர், டெல்லி விமான நிலையத்தில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின்…

22 minutes ago

பட்டப்பகலில் பயங்கரம்…! நடந்து சென்ற பெண்களிடம் வேலையை காட்டிய வாலிபர்கள்… இணையத்தில் தீயாய் பரவும் சிசிடிவி காட்சிகள்…!!

தெலங்கானா மாநிலம் ஜன்காமா பகுதியில் உள்ள நெசவாளர் காலனியில் இரண்டு பெண்கள் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு சங்கிலி…

51 minutes ago

BREAKING: 5 திமுக MLA-க்கள் ராஜினாமா?….. தவெக விரித்த பனையூர் வலை…. திமுகவை அதிர வைக்கும் ரகசிய ரிப்போர்ட்….!

திமுகவில் மேற்கொள்ளப்பட்டு வரும் உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாக மாற்றங்களால் சில சட்டமன்ற உறுப்பினர்கள் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவர்கள்…

56 minutes ago