ஸ்ரீநகரிலிருந்து டெல்லி வழியாக மும்பை செல்வதற்காக இணைப்பு விமானத்தில் பயணித்த நபர் ஒருவர், டெல்லி விமான நிலையத்தில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் அலட்சியத்தால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளார். மாலை 4 மணிக்கு புறப்பட வேண்டிய விமானத்தை தொடர்ந்து தாமதப்படுத்தி, இறுதியில் முற்றிலும் ரத்து செய்துள்ளனர். இது குறித்து பயணி கேள்வி கேட்டபோது, அடுத்த விமானம் எப்போது புறப்படும் அல்லது இயக்கப்படுமா என்பது பற்றிய எந்தத் தெளிவான தகவலையும் வழங்காமல், அவரது பயணச்சீட்டையும் ஊழியர்கள் வாங்கி வைத்துக்கொண்டு அலட்சியமாகப் பதிலளித்துள்ளனர்.
மேலும், அடுத்த விமானம் 2 நாட்களுக்குப் பிறகே உள்ளது என்றும், “உங்களால் முடிந்தால் புகார் அளித்துக் கொள்ளுங்கள்” என்றும் ஊழியர்கள் கூறியதால் அங்கு பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. நடுவழியில் தவித்து நிற்கும் பயணியின் தவிப்பு குறித்து எந்தப் பொறுப்பும் ஏற்காத ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தின் இந்தச் செயல் சமூக வலைதளங்களில் பயணிகள் மற்றும் இணையவாசிகளின் கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது.
கர்நாடக மாநிலம் மண்டியா பகுதியில், பள்ளிவாசல் அருகே பல ஆண்டுகளாக அமர்ந்து பிச்சை எடுத்து வந்த முதிய பெண்மணி ஒருவர்…
'மர மனித நோய்' என்று பரவலாக அறியப்படும் எபிடெர்மோடிஸ்பிளாசியா வெருசிஃபார்மிஸ் என்பது மனிதர்களைப் பெரிதும் பாதிக்கக்கூடிய ஒரு மிக அரிதான…
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர்…
சங்கரெட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்த சுரேகா என்ற இளம்பெண், தனது காதல் திருமணத்திற்குப் பெற்றோர் சம்மதிக்காத…
ரயிலில் பயணித்த நபர் ஒருவரிடம், ரயில்வே உணவக ஊழியர் அதிகக் கட்டணம் வசூலித்து அராஜகத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
நாகலாந்து மற்றும் அசாம் மாநிலங்களில் வீசிய வீரியமிக்க வெள்ளத்தில் சிக்கி, படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 53 வயதான 'ஜோய்மோதி' என்ற பெண்…