நபர் ஒருவரின் அலட்சியமான மற்றும் அவசரச் செயலால், நாய் ஒன்று பரிதாபமாகத் தனது உயிரை இழந்துள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நடைமேடையில் இருந்து ரயில் புறப்பட்டு நகரத் தொடங்கியபோது, அந்த நபர் தான் அவசரமாக ரயிலில் ஏறியதுடன், தன் கூடவே அழைத்து வந்த நாயையும் ஓடும் ரயிலில் மேலே இழுத்து ஏற்ற முயன்றுள்ளார். ஆனால், ஓடும் ரயிலின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் அந்த நாய் தண்டவாளத்திற்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கி கொடூரமான முறையில் உயிரிழந்தது.
தான் ஏற முடியாத நிலையில், நாயை ஓடும் ரயிலில் ஏற்ற முயன்ற அந்த நபரின் பொறுப்பற்ற செயலால் தான் இந்த விபத்து நடந்துள்ளது. “அவசரத்தில் மனிதன் செய்யும் முட்டாள்தனத்திற்கு வாய் பேசாத பிராணி உயிரைக் கொடுக்க வேண்டியதாகிவிட்டது” எனச் சமூக வலைதளங்களில் பலரும் அந்த நபருக்கு எதிராகக் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் மண்டியா பகுதியில், பள்ளிவாசல் அருகே பல ஆண்டுகளாக அமர்ந்து பிச்சை எடுத்து வந்த முதிய பெண்மணி ஒருவர்…
'மர மனித நோய்' என்று பரவலாக அறியப்படும் எபிடெர்மோடிஸ்பிளாசியா வெருசிஃபார்மிஸ் என்பது மனிதர்களைப் பெரிதும் பாதிக்கக்கூடிய ஒரு மிக அரிதான…
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர்…
சங்கரெட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்த சுரேகா என்ற இளம்பெண், தனது காதல் திருமணத்திற்குப் பெற்றோர் சம்மதிக்காத…
ரயிலில் பயணித்த நபர் ஒருவரிடம், ரயில்வே உணவக ஊழியர் அதிகக் கட்டணம் வசூலித்து அராஜகத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
நாகலாந்து மற்றும் அசாம் மாநிலங்களில் வீசிய வீரியமிக்க வெள்ளத்தில் சிக்கி, படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 53 வயதான 'ஜோய்மோதி' என்ற பெண்…