நபர் ஒருவரின் அலட்சியமான மற்றும் அவசரச் செயலால், நாய் ஒன்று பரிதாபமாகத் தனது உயிரை இழந்துள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நடைமேடையில் இருந்து ரயில் புறப்பட்டு நகரத் தொடங்கியபோது, அந்த நபர் தான் அவசரமாக ரயிலில் ஏறியதுடன், தன் கூடவே அழைத்து வந்த நாயையும் ஓடும் ரயிலில் மேலே இழுத்து ஏற்ற முயன்றுள்ளார். ஆனால், ஓடும் ரயிலின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் அந்த நாய் தண்டவாளத்திற்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கி கொடூரமான முறையில் உயிரிழந்தது.
தான் ஏற முடியாத நிலையில், நாயை ஓடும் ரயிலில் ஏற்ற முயன்ற அந்த நபரின் பொறுப்பற்ற செயலால் தான் இந்த விபத்து நடந்துள்ளது. “அவசரத்தில் மனிதன் செய்யும் முட்டாள்தனத்திற்கு வாய் பேசாத பிராணி உயிரைக் கொடுக்க வேண்டியதாகிவிட்டது” எனச் சமூக வலைதளங்களில் பலரும் அந்த நபருக்கு எதிராகக் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
