தமிழ் சினிமாவில் சிவப்பு ரோஜாக்கள் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் வடிவுக்கரசி. படித்துக் கொண்டிருந்த போதே வீட்டுக்குத் தெரியாமல் அந்த படத்தில் கவர்ச்சியான வேடத்தில் நடித்தார். ஆனால் அவரின் வித்தியாசமான மிடுக்கான நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்தது. அதன் பின்னர் பல படங்களில் வில்லி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து இப்போது வரை அசத்தி வருகிறார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் என பழமொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இதுவரை சுமார் 350 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவ்வாறு தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். வடிவுக்கரசி எத்தனையோ கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் பாரதிராஜா இயக்கத்தில் அவர் நடித்த கதாபாத்திரங்கள் அவருக்கு அழியாப் புகழைப் பெற்றுத் தந்தன. சிவப்பு ரோஜாக்கள், முதல் மரியாதை மற்றும் கிழக்குச் சீமையிலே போன்ற படங்களில் அவரின் கதாபாத்திரத்தை குறிப்பிட்டு அதற்கு உதாரணமாக சொல்லலாம்.
அதேபோல வில்லி கதாபாத்திரத்தில் மட்டும்தான் அவர் சிறப்பான நடிப்பைக் கொடுப்பார் என்றில்லாமல் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கலக்குவார். ஒரு கட்டத்தில் சினிமாவில் அவருக்குப் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காத போது சின்னத்திரை பக்கம் ஒதுங்கினார். அங்கும் அவருக்கு கொடூர வில்லி கதாபாத்திரமேக் கொடுக்கப்பட்டது. சினிமாவில் தூள் கிளப்பியவர் சீரியலை மட்டும் விட்டு வைப்பாரா என்ன? அடித்து தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறார்.
வடிவுக்கரசி சிவாஜி கணேசனின் ‘முதல் மரியாதை’ படத்தில் அவருக்கு மனைவியாக நடித்திருப்பார். ஊரில் எல்லோராலும் மதிக்கப்படும் சிவாஜி,வீட்டுக்குள் தன்னுடைய மனைவிக்கு பயந்து ஒடுங்கியவராக, அவரிடம் பேசக் கூட விரும்பாதவராக நடித்திருப்பார். இருவருக்கும் படத்தில் நடிப்புப் போரே நடந்திருக்கும்.
இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் வடிவுக்கரசி “முதல் மரியாதை ஷூட்டிங்கில் முதலில் சிவாஜி சாருக்கு பாரதிராஜா சார் ஸ்டைலே புரியவில்லை. ‘நடிக்க வைக்குறேன்னு கூப்டு வந்து நடக்க வைக்குறான்” என புலம்புவார். என்னை உதைப்பது போன்ற காட்சியில் என் மேல் கால் கூட படாமல் நடித்தார். எப்படி நடிக்கப் போகிறேன் என என்னிடம் விளக்கமாக சொல்லிவிட்டுதான் நடித்தார். ஆனால் அவர் கால் படாமல் நானாக கீழே விழுவதுதான் கஷ்டமாக இருந்தது” எனக் கூறியுள்ளார்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…