Categories: சினிமா

பாரதிராஜா பத்தி சிவாஜி சார் பொலம்புவாரு… உதைக்குற காட்சியில நடந்த சுவாரஸ்ய சம்பவம்- வடிவுக்கரசி பகிர்ந்த தகவல்!

Spread the love

தமிழ் சினிமாவில் சிவப்பு ரோஜாக்கள் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் வடிவுக்கரசி. படித்துக் கொண்டிருந்த போதே வீட்டுக்குத் தெரியாமல் அந்த படத்தில் கவர்ச்சியான வேடத்தில் நடித்தார். ஆனால் அவரின் வித்தியாசமான மிடுக்கான நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்தது. அதன் பின்னர் பல படங்களில் வில்லி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து இப்போது வரை அசத்தி வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் என பழமொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இதுவரை சுமார் 350 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவ்வாறு தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். வடிவுக்கரசி எத்தனையோ கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் பாரதிராஜா இயக்கத்தில் அவர் நடித்த கதாபாத்திரங்கள் அவருக்கு அழியாப் புகழைப் பெற்றுத் தந்தன. சிவப்பு ரோஜாக்கள், முதல் மரியாதை மற்றும் கிழக்குச் சீமையிலே போன்ற படங்களில் அவரின் கதாபாத்திரத்தை குறிப்பிட்டு அதற்கு உதாரணமாக சொல்லலாம்.

அதேபோல வில்லி கதாபாத்திரத்தில் மட்டும்தான் அவர் சிறப்பான நடிப்பைக் கொடுப்பார் என்றில்லாமல் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கலக்குவார். ஒரு கட்டத்தில் சினிமாவில் அவருக்குப் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காத போது சின்னத்திரை பக்கம் ஒதுங்கினார். அங்கும் அவருக்கு கொடூர வில்லி கதாபாத்திரமேக் கொடுக்கப்பட்டது. சினிமாவில் தூள் கிளப்பியவர் சீரியலை மட்டும் விட்டு வைப்பாரா என்ன? அடித்து தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறார்.

வடிவுக்கரசி சிவாஜி கணேசனின்  ‘முதல் மரியாதை’ படத்தில் அவருக்கு மனைவியாக நடித்திருப்பார். ஊரில் எல்லோராலும் மதிக்கப்படும் சிவாஜி,வீட்டுக்குள் தன்னுடைய மனைவிக்கு பயந்து ஒடுங்கியவராக, அவரிடம் பேசக் கூட விரும்பாதவராக நடித்திருப்பார். இருவருக்கும் படத்தில் நடிப்புப் போரே நடந்திருக்கும்.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் வடிவுக்கரசி “முதல் மரியாதை ஷூட்டிங்கில் முதலில் சிவாஜி சாருக்கு பாரதிராஜா சார் ஸ்டைலே புரியவில்லை. ‘நடிக்க வைக்குறேன்னு கூப்டு வந்து நடக்க வைக்குறான்” என புலம்புவார். என்னை உதைப்பது போன்ற காட்சியில் என் மேல் கால் கூட படாமல் நடித்தார். எப்படி நடிக்கப் போகிறேன் என என்னிடம் விளக்கமாக சொல்லிவிட்டுதான் நடித்தார். ஆனால் அவர் கால் படாமல் நானாக கீழே விழுவதுதான் கஷ்டமாக இருந்தது” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

கள்ளக்காதலியின் கடனை அடைக்க நடந்த கொடூரம்…! “வேலைக்கு சென்ற பெண்ணை 7 துண்டுகளாக வெட்டி…” வசமாக சிக்கிய 3 பேர்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

சேலம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்தவர் தங்கமணி (50). சங்கர் நகர் பகுதியில் வீடுகளுக்குச் சென்று வீட்டு…

4 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… கருவில் பறிபோன உயிர்… கணவன் மீது பழிபோட மனைவியின் அதிர்ச்சித் திட்டம்… குடும்ப உறவுகளை உலுக்கிய கோர நாடகம்…!

நேற்றைய அன்பின் பிணைப்புகள் இன்று அறுபட்டு, கணவன்-மனைவி மற்றும் குடும்ப உறவுகள் உச்சக்கட்ட மோதலாக மாறியுள்ளன. தூய்மையற்ற ரத்தம் என்ற…

5 மணத்தியாலங்கள் ago

அய்யய்யோ… கண் இமைக்கும் நேரத்தில்… மரணத்தின் வாயில் இருந்து தப்பிய சிறுமி… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

சூரத்தில் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி, ஈகோ வேன் மோதியதில் வாகனத்தின் அடியில் விழுந்தாள். எதிர்பாராத…

5 மணத்தியாலங்கள் ago

ஐயோ… கல்யாணம்னு வந்தா ஓடிப் போவியா?… காதலன் வீட்டிற்கு நேரில் சென்று… தந்தை முன் பஞ்சாயத்து கூட்டிய காதலி… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

பார்ப்பேட்டா பகுதியில் காதலுக்காகத் துணிச்சலான முடிவெடுத்த ஒரு பெண்ணின் கதை தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகக்…

5 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… என்னடா இது… என் நம்பரை பிளாக் பண்ணிட்டா… குடிநீர்த் தொட்டியில இருந்து குதிக்கிறேன்?… காதலியை மிரட்ட ஷோலே… வீருவாக மாறிய இளைஞன் கைது… இணையத்தில் வீடியோ வைரல்…!

அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நௌகவான் சாதத் காவல் நிலையப் பகுதியில் விசித்திரமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு இளைஞனும்…

6 மணத்தியாலங்கள் ago

“அப்பாவின் நண்பர் வீடு…” காதலனுக்காக நகைகளை திருடி கல்லூரி மாணவி செய்த காரியம்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்கள்…!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம்…

6 மணத்தியாலங்கள் ago