இயக்குனரும், நடிகருமான மாரிமுத்து கடந்த 8- ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். அவர் சின்ன திரையில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரின் மூலம் பிரபலம் ஆனவர். நடிகர் மாரிமுத்து வாலி, சண்டை கோழி, பைரவா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார்.
கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியான கண்ணும் கண்ணும் திரைப்படத்தின் மூலம் மாரிமுத்து இயக்குனராக அறிமுகம் ஆனார். அவர் கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். அவரது இறப்பிற்கு திரை பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் மாரிமுத்துவின் இறப்பு குறித்து நகைச்சுவை நடிகர் வடிவேலு கூறியதாவது, மாரிமுத்து நல்ல மனிதர்.
அவர் இறந்ததை எண்ணி மிகவும் வருந்துகிறேன். கடைசியாக அவர் தனது மனைவி, மகள், மகனுடன் கொடுத்திருந்த பேட்டியையும் பார்த்து நான் சந்தோஷப்பட்டேன். ஆனால் அதற்குள் இப்படி ஆகிவிட்டது. கண்ணும் கண்ணும் திரைப்படத்தில் “யாரு கேட்டாலும் சொல்லாத; போலீஸ் வந்து அடிச்சு கேட்டாலும் யார்கிட்டயும் சொல்லாத” என்ற காமெடியை உருவாக்கியது அவர்தான்.
அதே போல கிணத்தை காணோம் என்ற காமெடிக்கு சொந்தக்காரரும் அவர்தான். நகைச்சுவை உணர்வு மிக்க மனிதர் எல்லாரிடமும் நன்றாக பேசுவார். அவர் இறந்ததை இப்போதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 தொகுதிகளில் அபார வெற்றி…
ஆளுநரின் வாகனக் கடந்து செல்லும் நிகழ்விற்காகப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், பிரசவ வலியால் அவதிப்பட்ட தன் கர்ப்பிணி மனைவியுடன் கணவர் ஒருவர்…
பாஜக தலைவர்களில் ஒருவரான அண்ணாமலை, கட்சியில் இருந்து தனக்கு ஏற்பட்டுள்ள சில அரசியல் அதிருப்திகள் காரணமாக, பாஜகவிலிருந்து விலகி புதிய…
ஒடிசா மாநிலம் ஜெகத்சிங்பூரில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (DRDA) அலுவலகத்தில் பணியாற்றிய சஞ்சய் அடேகா என்ற இளநிலை…
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஓல்ட் ஏர்போர்ட் சாலையில், அம்மாநில ஆளுநரின் பாதுகாப்பு வாகனங்கள் கடந்து செல்வதற்காக சுமார் 30…
கடலூர் மாவட்டம் சிதம்பரம் வடக்கு வீதியில் 'குமர விலாஸ்' என்ற ஹோட்டலை நடத்தி வரும் ராஜசுந்தரம் - ஜெயந்தி தம்பதியினரிடம்,…