தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் அரசியலுக்கு வருவது என்பதும், அதுகுறித்த விவாதங்கள் எழுவதும் காலம் காலமாக தொடரும் ஒரு வழக்கமான நிகழ்வுதான். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகியோரின் அரசியல் பயணமும், சமீபத்தில் நடிகர் விஜய் அரசியல் கட்சியைத் தொடங்கி தீவிரமாக களம் இறங்கியதும் இந்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. இந்த வரிசையில், தற்போது நடிகர் தனுஷின் பெயரும் சமூக வலைதளங்களில் அரசியல் ரீதியாக பரபரப்பாக பேசப்படத் தொடங்கியுள்ளது. இதற்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்டது தனுஷ் அல்ல, அவரது தந்தையும் இயக்குநருமான கஸ்தூரி ராஜா சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கருத்துகள்தான்.
அந்த நிகழ்ச்சியில் அரசியல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த கஸ்தூரி ராஜா, “அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், என் மகன்களோ அல்லது பேரன்களோ கூட வரலாம்” என்று பொதுப்படையாகக் குறிப்பிட்டிருந்தார். மேலும், சென்னையில் கோபாலபுரம் தான் மிகவும் பவர்ஃபுல்லான இடம் என்றும், கலைஞர் வாழ்ந்த அந்த இடம்தான் ஒளி பிறந்த இடம் என்றும் அவர் பேசியிருந்தார். தனுஷ் தரப்பில் இருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வராத நிலையிலும், கஸ்தூரி ராஜாவின் இந்த ஒரு வரி பேச்சு, “தனுஷுக்கு அரசியல் ஆசை இருக்கிறதா? குடும்பத்தினர் ஏதேனும் அரசியல் திட்டம் வைத்துள்ளார்களா?” என்ற விவாதங்களை இணையத்தில் காட்டுத்தீயாக பரவச் செய்தது.
இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்ட பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், தனது எக்ஸ் (X) தளத்தில் தனுஷை வம்புக்கு இழுக்கும் வகையில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், கடந்த சில ஆண்டுகளாக வெள்ளை வேட்டி, சட்டை, ருத்ராட்ச கொட்டை மற்றும் மேடைகளில் பேசும் தத்துவங்கள் என ‘சுள்ளான்’ அரசியலுக்கு தயாராகிவிட்டதாகவும், விஜய் வென்றதால் மக்கள் தன்னையும் முதல்வர் ஆக்குவார்கள் என தனுஷ் நம்புவதாகவும் கிண்டலாகப் பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவு தனுஷ் ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதோடு, “அப்பா பொதுவாகச் சொன்ன கருத்துக்கு தனுஷை ஏன் தாக்க வேண்டும்?” என்று அவர்கள் ப்ளூ சட்டை மாறனுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாக தனுஷின் பொது மேடைப் பேச்சுகளும், அவரது உடை அமைப்பும் ப்ளூ சட்டை மாறனின் கருத்துக்கு வலு சேர்ப்பது போல் இருப்பதாக மற்றொரு தரப்பினர் வாதிடுகின்றனர். குறிப்பாக, படங்களின் இசை வெளியீட்டு விழாக்களில் வாழ்க்கை, போராட்டம், வெற்றி-தோல்வி குறித்து தனுஷ் பேசும் தத்துவார்த்தமான பேச்சுகள் பலரால் “அரசியல்வாதி பாணி பேச்சு” என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது. தனுஷ் தரப்பு இந்த சர்ச்சைகளுக்கு எப்போதும் போல மௌனம் காத்து வந்தாலும், கஸ்தூரி ராஜாவின் மேடைப் பேச்சு மற்றும் ப்ளூ சட்டை மாறனின் ட்வீட் காரணமாக தனுஷின் அரசியல் வருகை குறித்த விவாதம் தற்போது கோலிவுட்டின் மிக முக்கிய ‘ஹாட் டாபிக்’ ஆக மாறியுள்ளது.
அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் மாகாணத்தில் உள்ள லிட்டில் ராக் பகுதியில், 26 வயது பள்ளி ஆசிரியை ஒருவர் 15 வயது சிறுவனைப்…
கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம் நெடுமங்காடு பகுதியைச் சேர்ந்த அஷ்கார் (31) என்பவர், தனது மனைவி அமீனாவை வரதட்சணை கேட்டுத்…
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த திலீபன், தனக்குக் கீழ் பணியாற்றும்…
ஆஸ்திரேலியாவில் திருமணமான ஆசிரியை ஒருவர் தனது பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவருடன் பாலியல் ரீதியாகத் தொடர்பு வைத்திருந்ததாகக் கைது…
கோடை விடுமுறை முடிந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பத் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் முக்கிய நகரங்களில்…
தெலுங்கானா மாநிலம், பெளகாவி மாவட்டத்தைச் சேர்ந்த பர்வதம்மா (46) என்பவருக்கும், சந்திரப்பா என்பவருக்கும் திருமணமாகி இரண்டு மகன்கள் இருந்தனர். இந்நிலையில்,…